கணவன் Vs மனைவி: என்னதான் சண்டைனாலும் சுவரெல்லாமா கட்டுவாங்க..🙄!

husband wife - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் கணவன் மனைவிக்கு இடையிலான சண்டை, கேலி, கிண்டல், காதல், பாசம் தொடர்பான வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் வயிறு குலுங்க சிரிப்பதோடு ஆச்சரியமும் அடைகிறார்கள். இந்த வீடியோ ஒரு கணவன் மனைவியின் சண்டையின் வீடியோவாகும்.

இந்த வீடியோ மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது என்பதை வீடியோவை பார்த்து புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அந்த சண்டையின் காரணமாக, மனைவி செய்த காரியம் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த வீடியோவைப் பார்ப்பவர்களால் கண்டிப்பாக சிரிப்பை நிறுத்த முடியாது. தனக்கும் தனது கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு, மனைவி படுக்கையில் ஒரு செங்கல் சுவரை எழுப்புகிறார்.

இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. வீடியோவில் கணவர் பயமும் கடுப்புமாக எதுவும் பேசாமல் இருப்பதையும் காண முடிகின்றது. மனைவியோ சுவர் எழுப்புவதிலேயே குறியாய் இருக்கிறார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் கோபமாக இருப்பதை வீடியோ-வில் காணலாம். கணவன் அமைதியாக அமர்ந்திருக்கிறார், மனைவி தனக்கும் கணவனுக்கும் இடையில் செங்கல் சுவர் எழுப்புவதில் மும்முரமாய் உள்ளார். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனைவி உண்மையில் செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு வலுவான சுவரைக் கட்டுகிறார்.

மனைவியின் செயலால் கணவன் எரிச்சலடைந்தாலும், பயம் காரணமாக எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார். வீடியோவை பார்த்தால், கணவன் மீது அதிக கோபம் கொண்ட மனைவி இருவருக்கும் நடுவில் சுவர் எழுப்ப முடிவு செய்திருப்பது தெரிகிறது.

இந்த வேடிக்கையான வீடியோ rising.teching என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல்வேறு விதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், ‘சுவர் கட்டுவதற்குப் பதிலாக, பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியுள்ளார். அதே நேரத்தில், மற்றொரு பயனர், ‘கணவன் மனைவி சண்டைக்கு நவீன தீர்வு’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories