இந்த நம்பர் கால்களை அட்டென்ட் செய்யாதீங்க.‌. SBI எச்சரிக்கை!

Hacker - 2026

மோசடி செய்பவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

ஸ்டேட் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கைக் குறிப்பில், மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் போலியான லிங்க் மூலமாக ஆன்லைன் பாதுகாப்பை உடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் சி.ஐ.டி காவல்துறையினர் வெளியிட்டிருந்த எச்சரிக்கையை ஸ்டேட் வங்கி ரீட்வீட் செய்திருந்தது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சி.ஐ.டி காவல்துறையினர் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரையும் இரண்டு செல்ஃபோன் எண்களில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

இந்த இரண்டு எண்களில் இருந்து அசாம் மாநிலத்தின் பல்வேறு வாடிக்கையாளர்கள் அழைப்புகளைப் பெறுவதோடு, மோசடியில் தள்ளப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனினும், அசாம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருக்கும் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களும் புதிய எண்களில் இருந்து விடுக்கப்படும் ஃபோன் அழைப்புகளில் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் சி.ஐ.டி காவல்துறையினர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 91-8294710946, +91-7362951973 ஆகிய இரண்டு எண்களில் இருந்து ஃபோனில் அழைப்பு விடுக்கப்படுவதாகவும், KYC எண்ணை அப்டேட் செய்வதற்காக இந்த மோசடியாளர்கள் அனுப்பும் ஃபிஷிங் லிங்கை அழுத்தக் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இது போன்ற ஃபிஷிங் லிங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த எண்களில் வரும் அழைப்புகளைப் பொருட்படுத்தாமல், அவற்றில் இருந்து அனுப்பப்படும் ஃபிஷிங் லிங்கை அழுத்த வேண்டாம். அவை ஸ்டேட் வங்கியோடு தொடர்புடையவை அல்ல’ எனக் கூறியுள்ளது.

பிறரை ஏமாற்றி போலியான இணைய லிங்களை அழுத்த வைப்பதன் மூலம், ஃபிஷிங் என்ற மோசடிக் குற்றம் அரங்கேற்றப்படுகிறது.

அதிகாரப்பூர்வ நிறுவனங்களைப் போல சைபர் கிரிமினல்களால் பெரும்பாலும் ஈமெயில்கள், எஸ்.எம்.எஸ்கள் முதலானவற்றில் தனிநபர்களைக் குறி வைத்து இந்த லிங்க் அனுப்பப்படுகிறது.

தற்போதைய ஸ்டேட் வங்கி மோசடிகளில், இந்த சைபர் கிரிமினல்கள் ஸ்டேட் வங்கி அதிகாரிகளைப் போல, ஃபிஷிங் லிங்கை அழுத்தி KYC விவரங்களைச் செலுத்துமாறு கூறி, தனி விவரங்களையும், வங்கி விவரங்களையும் திருடுகின்றனர்.

`கௌன் பனேகா க்ரோர்பதி’ குலுக்கல் போட்டியில் 25 லட்சம் ரூபாய் வென்றதாகக் கூறி, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து மெசேஜ்களின் மூலம் வாட்சாப் வாடிக்கையாளர்களைக் குறி வைக்கும் மோசடி செயலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

பெரும்பாலான இந்த எண்கள் பாகிஸ்தானின் +92 என்ற தொடக்க எண்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பயனாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமீபத்தில் தில்லி காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories