4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே பையர்நாயக்கன்பட்டி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார் ( 44). இவருக்கு அரசு சார்பில் 3 சென்ட் நிலம் பட்டா கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியில் குமார் ஈடுபட்டு வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் மற்றும் அவரது மகன் ஆகியோர், குமாரிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இந்த நிலம் தங்களுக்கே சொந்தம் என்றும், நிலத்தை காலி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்த தாகவும் கூறப்படுகிறது.

இதனால் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். இது பற்றி அரூர் டி.எஸ்.பி. மற்றும் போலீஸ் நிலையத் திலும் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.இங்கு குமார் தனது மனைவி விஜயலட்சுமி (38), தாய் ஜெயா(60), தங்கைகள் சுமதி (40), ஹரிணி (19) மற்றும் குழந் தைகளுடன் வந்திருந்தார். அப்போது விஜயலட்சுமி உள்பட 4 பெண்களும் திடீரென தாங்கள் கொண்டு வைத்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றனர். இதை பார்த்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே 4 பெண்களையும் தடுத்து நிறுத்தி, அவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இதன்பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது தங்களது நிலத்தை அரசியல் கட்சி பிரமுகர் அபகரிக்க முயற்சி செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.இதன்பின்னர் தீக்குளிக்க முயற்சி செய்த 4 பெண்களையும் விசாரிப்பதற்காக தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

IMG 20220425 165651 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

Topics

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Entertainment News

Popular Categories