எலான் மஸ்கிற்கு ட்விட்டர் விற்பனை..?

Published:

உலகின் முதன்மை பணக்காரரான எலான் மஸ்கிற்கு ட்விட்டர் நிறுவனம் விற்கப்படுவது உறுதியாகியுள்ளது.

திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.3.36 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் டாலர்) ஒப்பந்தம் இறுதியானதாக கூறப்படுகிறது

ட்விட்டரில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, முன்னெப்போதும் இருந்ததை விட சிறப்பாக்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.ட்விட்டர் விற்கப்பட்டுள்ளதையடுத்து இணையத்தில் எலான் மஸ்க் பழைய ட்வீட் ஒன்று வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், டுவிட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன்பின், டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தொகை பரிமாற்றம், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்துவது யார் போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. 

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
IMG 20220426 WA0088 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img