கலெக்டரு செய்யிற காரியமா இது?! நடிகை போட்டோவுக்கு ‘கிழிச்சுட்ட போ’ன்னு கருத்து..!

Published:

collector tweet1 - 2026

கிழிச்சுட்டே, போ! என்று நடிகை ரஷ்மிகா மந்தன்னா போஸ்ட் மீது பரபரப்பு ட்வீட் செய்த மாவட்ட கலெக்டர் குறித்து பலத்த விவாதம் எழுந்தது.

ஹீரோயின் ரஷ்மிகா மந்தன்னா மீது தெலங்காணா மாநில, ஜகித்யால கலெக்டர் ரவி செய்த ட்வீட் விவாதத்திற்கு உள்ளானது. ரஷ்மிகா மந்தன்னா தன் புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்தார். அதற்கு, “கிழித்துவிட்டாய், போ!” என்று கலெக்டர் கமெண்ட் செய்தார்.

இதுகுறித்து, “உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு இதுபோல் காமெண்ட் செய்யலாமா?” என்று அவர்மீது நெட்டிசன்கள் விமர்சனம் எழுப்பியுள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட கலெக்டர் ரவி அந்த டுவீட் தான் எழுதவில்லை என்று விளக்கமளித்தார்.

collector tweet - 2026

அது குறித்து போலீசாரை அணுகிய ரவி, தன் ட்விட்டர் அக்கவுண்ட் ஹாக் ஆகிவிட்டது என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினார் . ஆனால் கலெக்டர் அக்கவுண்டை ஒரு ஊழியர் ஹாண்டில் செய்வதாக தகவல் வெளியானது. அதே நேரம், அந்த ட்வீட்டையும் கலெக்டர் ரவி நீக்கி விட்டார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img