spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்முதல் ஏஐ சென்சார் அடிப்படையிலான சைக்கிள் கவுன்டரை உருவாக்கி இளைஞர் சாதனை!

முதல் ஏஐ சென்சார் அடிப்படையிலான சைக்கிள் கவுன்டரை உருவாக்கி இளைஞர் சாதனை!

- Advertisement -

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் சென்சார் அடிப்படையிலான சைக்கிள் கவுன்டர் பெங்களூருவில் நிறுவப்பட்டிருக்கிறது.

18 வயது இளைஞர் ஒருவர் இந்தியாவில் முதல் ஏஐ சென்சார் அடிப்படையிலான சைக்கிள் கவுன்டரை உருவாக்கி இருக்கிறார்.

இந்தியாவில் முதல் ஏஐ சென்சார் அடிப்படையிலான சைக்கிள் கவுன்டரை 18 வயது இளைஞர் உருவாக்கியது பலரின் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.

சைக்கிள் கவுன்டர் ஆனது ஏஐ சென்சார் கேமரா மற்றும் இயந்திர கற்றல் அடிப்படையிலான அல்காரிதம் மூலம் இயக்கப்படுகிறது. இதில் காட்டப்படும் தரவு எண்ணிக்கையானது சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்கும் எனவும் பிரத்யேக சுழற்சி பாதைகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் சென்சார் அடிப்படையிலான சைக்கிள் கவுன்டரை பெங்களூரு பெற்றிருக்கிறது. சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தைக் கணக்கிட்டு சுழற்சி முறையில் மின்னணு சாதனமாக இது பயன்படும்.

சைக்கிள் கவுன்டர் ஆனது 18 வயதான நிஹார் தக்கர் என்பவரால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது கர்நாடகா தலைநகர் தொட்டனேகுந்தியில் உள்ள வெளிவட்ட சைக்கிள் பாதைக்கு அருகில் நகர்ப்புற நிலப் போக்குவரத்து இயக்குநரகத்தில் ஒத்துழைப்போடு இந்த இயந்திரம் நிறுவப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நிஹார் தக்கர் அளித்த தகவலை பார்க்கலாம்.

மிதிவண்டிகளின் பயன்பாட்டுத் தரவை சேகரிக்க உதவும்
நாட்டின் முதல் நேரடி சைக்கிள் கவுன்டர் இதுவாகும், பிரத்யேக பாதையை பயன்படுத்தி மிதிவண்டிகளின் பயன்பாட்டுத் தரவை சேகரிக்க இது உதவும்.

சைக்கிள் பாதையின் தாக்கத்தை கண்காணிக்கவும், சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது. நேரடி மதிவண்டி கவுன்டர் ஆனது சஸ்டைனபிள் மொபைலிட்டி அக்கார்டு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கிறது.

இதன் முன்னோடி திட்டத்திற்கு டைரக்டரேட் ஆஃப் அர்பன் லேண்ட் மற்றும் டிரான்ஸ்போர்ட் (DULT) நிதியளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கவுன்டரினால் சைக்கிள் மற்றும் பிற அனைத்து வகையான வாகனங்களையும் வேறுபடுத்தி அறிய முடியும், இது இரு திசைகளிலும் இருக்கும் சைக்கிள் பாதை மற்றும் சர்வீஸ் சாலையில் சைக்கிள் ஓட்டுபவர்களை மட்டுமே குறிப்பிட்டும் கணக்கிடுகிறது.

சைக்கிள் கவுன்டர் ஏஐ சென்சார் கேமரா மற்றும் இயந்திர கற்றல் அடிப்படையிலான அல்காரிதம் மூலம் இது இயக்கப்படுகிறது. ஒரு போர்ட் போன்று வைத்து அதில் அந்த வழியில் பயணிக்கப்படும் சைக்கிள் எண்ணிக்கை இதில் காட்டப்படும்.

இதில் வழங்கப்படும் தரவுகளான சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்கவும் அர்ப்பணிப்புள்ள சுழற்சி பாதைகளை உருவாக்கவும் பயன்படுத்தலாம் என நிஹார் தக்கர் குறிப்பிட்டுள்ளார்.

சைக்கிள் லேன், போக்குவரத்து பகுப்பாய்வு மற்றும் நேரடி சைக்கிள் கவுன்டர்கள் ஏஐ அடிப்படையிலான கருவிகள் மூலம் செயல்படுகிறது.

மேலும் இதுகுறித்து தக்கர் கூறுகையில், போக்குவரத்து விதிகளை அமல்படுத்த உதவும் ஏஐ அடிப்படையிலான கருவிகளை நாங்கள் உருவாக்குகிறோம். சைக்கிளுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாதைகளில் பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் உள்ள கேமரா ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிகழ்நேரத்தில் காட்சிகளை செயல்படுத்தி விதிமீறல்களையும் பதிவு செய்து போக்குவரத்து காவல்துறையிடம் புகாரளிக்கவும் உதவுகிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த லைவ் சைக்கிள் கவுன்டரானது DULT மூலம் நிதியளிக்கப்பட்டு SuMA (Sustainable Mobility Accord) திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கிறது. கவுன்டரினால் சைக்கிள் மற்றும் பிற அனைத்து வகையான வாகனங்களையும் வேறுபடுத்தி அறிய முடியும்.

இது இரு திசைகளிலும் உள்ள சைக்கிள் பாதை மற்றும் சர்வீஸ் சாலையில் பயணிக்கும் சைக்கிளை மட்டுமே கணக்கிடும். இது சைக்கிள் ஓட்டுபவர்களை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe