இலங்கையிலிருந்து படகுகளை திரும்பக் கொண்டுவரும் செலவு: தமிழக அரசு ஏற்பதாக அறிவிப்பு

tn சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் விடுவித்திருக்கும் நிலையில், அவற்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்காக இலங்கையில் உள்ள பல்வேறு நீதிமன்றத்தில் இன்று மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நிலையில், விடுவிக்கப்படும் படகுகளை பொறுப்பேற்பதற்காக, ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குநர் மற்றும் மீன்துறை ஆய்வாளர் ஆகியோர் படகு உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட அதிகார ஆவணங்களுடன் இலங்கைக்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களின் 81 மீன்பிடிப் படகுகளும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படும் என்றும், இதனைத் தொடர்ந்து இப்படகுகளை தமிழகத்திற்கு கொண்டுவர ஏதுவாக சுமார் 150 மீனவர்கள் அடங்கிய மீட்புக் குழுக்கள் மீட்புப் படகுகளுடன் இந்திய அரசின் அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மீட்புக் குழுக்கள் 81 படகுகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளை நீக்கி, இந்திய கடலோர காவல்படை உதவியுடன் தமிழகம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இந்த மீட்புக் குழு மற்றும் மீட்புப் படகுகள் இலங்கைக்குச் சென்று அங்குள்ள 81 மீன்பிடிப் படகுகளை தமிழகம் கொண்டு வருவதற்கான எரியெண்ணெய், உணவு மற்றும் பழுது நீக்க செலவு ஆகிய அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும் என அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இது தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞரை நியமித்து வாதாடுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories