December 6, 2025, 8:08 AM
23.8 C
Chennai

இலங்கையிலிருந்து படகுகளை திரும்பக் கொண்டுவரும் செலவு: தமிழக அரசு ஏற்பதாக அறிவிப்பு

tn சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் விடுவித்திருக்கும் நிலையில், அவற்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்காக இலங்கையில் உள்ள பல்வேறு நீதிமன்றத்தில் இன்று மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நிலையில், விடுவிக்கப்படும் படகுகளை பொறுப்பேற்பதற்காக, ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குநர் மற்றும் மீன்துறை ஆய்வாளர் ஆகியோர் படகு உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட அதிகார ஆவணங்களுடன் இலங்கைக்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களின் 81 மீன்பிடிப் படகுகளும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படும் என்றும், இதனைத் தொடர்ந்து இப்படகுகளை தமிழகத்திற்கு கொண்டுவர ஏதுவாக சுமார் 150 மீனவர்கள் அடங்கிய மீட்புக் குழுக்கள் மீட்புப் படகுகளுடன் இந்திய அரசின் அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மீட்புக் குழுக்கள் 81 படகுகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளை நீக்கி, இந்திய கடலோர காவல்படை உதவியுடன் தமிழகம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இந்த மீட்புக் குழு மற்றும் மீட்புப் படகுகள் இலங்கைக்குச் சென்று அங்குள்ள 81 மீன்பிடிப் படகுகளை தமிழகம் கொண்டு வருவதற்கான எரியெண்ணெய், உணவு மற்றும் பழுது நீக்க செலவு ஆகிய அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும் என அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இது தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞரை நியமித்து வாதாடுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories