பக்தர்களுக்கு முக்கிய செய்தி: திருப்பதி தேவஸ்தானம்!

Published:

Thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

அதனால் கொரோனா காலகட்டத்தில் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு கொரோனா குறைந்து வந்த நிலையில் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அதன்படி கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போது நாள் ஒன்றுக்கு 10,000 தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஆதார் கார்டு அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் 300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் மாதம் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அதனைப்போலவே ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஸ்ரீவாரி சேவா கல்யாணஸ்தவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை, மற்றும் சகஸ்ர தீபாலனகர சேவை ஆகியவற்றுக்கான முன்பதிவு டிக்கெட்கள் நேற்று பிற்பகல் 3 மணி முதல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, உரிய தகவல்கள் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். தற்போது ஆன்லைன் டிக்கெட் ஒரு நாளைக்கு 1000 டோக்கன் விதம் வெளியிடப்படுகிறது.

அவற்றை பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழு மலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img