அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை பாஜக வில் யாரும் கூறக்கூடாது -அண்ணாமலை..

  • அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம் என சென்னையில் இன்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
  • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார்.

அ.தி.மு.க. பாஜனதா தலைவர்கள் மாறி, மாறி விமர்சித்து வருவது தொடர்பாக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது,

அ.தி.மு.க.வுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி தேசிய அளவிலான பிரச்சினைகளில் அவர்கள் எங்களோடு நிற்பவர்கள். பொன்னையன் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து அ.தி.மு.க.வின் கருத்து என்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் தெரிவிப்பதுதான்.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார். அதற்காகதான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் அ.தி.மு.கவை அழித்து பா.ஜனதா வளர வேண்டிய அவசியமில்லை. தேசியத்திற்கு ஆதரவானவர்களும், திராவிட மாடல் என்ற ஏமாற்று வித்தையை நம்பாதவர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இனிமேல் அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

பா.ம.க. தலைவர் அன்புமணி மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜனதா தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். மேகதாது அணைகட்டக்கூடாது என்று தஞ்சாவூரில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அப்போது அன்புமணி எங்கே போனார். கருத்து எதுவும் சொல்லவில்லை . மேகதாது அணை கட்டியே தீர வேண்டும் என்று கர்நாடகத்தில் காங்கிரசார் பேரணி நடத்தினார்கள்.அப்போது இங்குள்ள காங்கிரசார் கண்டிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

images 19 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories