அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை பாஜக வில் யாரும் கூறக்கூடாது -அண்ணாமலை..

  • அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம் என சென்னையில் இன்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
  • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார்.

அ.தி.மு.க. பாஜனதா தலைவர்கள் மாறி, மாறி விமர்சித்து வருவது தொடர்பாக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது,

அ.தி.மு.க.வுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி தேசிய அளவிலான பிரச்சினைகளில் அவர்கள் எங்களோடு நிற்பவர்கள். பொன்னையன் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து அ.தி.மு.க.வின் கருத்து என்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் தெரிவிப்பதுதான்.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார். அதற்காகதான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் அ.தி.மு.கவை அழித்து பா.ஜனதா வளர வேண்டிய அவசியமில்லை. தேசியத்திற்கு ஆதரவானவர்களும், திராவிட மாடல் என்ற ஏமாற்று வித்தையை நம்பாதவர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இனிமேல் அ.தி.மு.க. தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

பா.ம.க. தலைவர் அன்புமணி மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜனதா தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். மேகதாது அணைகட்டக்கூடாது என்று தஞ்சாவூரில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அப்போது அன்புமணி எங்கே போனார். கருத்து எதுவும் சொல்லவில்லை . மேகதாது அணை கட்டியே தீர வேண்டும் என்று கர்நாடகத்தில் காங்கிரசார் பேரணி நடத்தினார்கள்.அப்போது இங்குள்ள காங்கிரசார் கண்டிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

images 19 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories