மக்கள் நலப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி..

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மக்கள் நல பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடைகோரிய மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க  முதலில் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. குறிப்பாக, இந்த தடைகோரி விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் மறுவாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழகத்தில் சுமார் 13,500 மக்கள் நல பணியாளர்களில் 1,800 பேர் இறந்துவிட்டனர். அதில் 7,000 பேர் 53 வயதை கடந்துவிட்டனர்.

1,500 பேர் 47 வயதை கடந்துவிட்டனர். மேலும் மக்கள் நல பணியாளர்களுக்கு தமிழக அரசு முன்மொழிந்துள்ள ஊதிய அட்டவணை, ஏற்கெனவே மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊதிய அட்டவணையை விட மிக குறைவு. ஒன்றிய மாநில அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நல பணியாளர்களுக்கு பின் ஊதியம் அல்லது வழங்கப்பட வேண்டிய ஊதியம் தற்போது மாநில அரசு ஏதும் தெரிவிக்கவில்லை. எனவே மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதஊதியம் ரூ.7,500 உடன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணி அமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருதா போத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிப்பிரியா பத்மநாபன், இந்த மனுவை தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது பேசிய நீதிபதிகள், தமிழக அரசின் முன்மொழிவு கட்டாயப்படுத்தவில்லை, இந்த முன்மொழிவை ஏற்று பணியில் சேருபவர்கள் சேரலாம். எனவே இந்த மனு மீது தடை விதிக்கமுடியாது; இதில் எவ்வித அரசியலும் இல்லை என கூறினர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நீண்ட காலம் பணியில் இல்லாத மக்கள்நல பணியாளர்களுக்கு, தமிழக அரசு பணி வழங்க முன்மொழிவை அறிவித்துள்ளது.

எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டாம் என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பெற்ற நீதிபதிகள், தமிழக அரசின் முன்மொழிவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், அரசின் முன்மொழிவை மறுத்து பணியை ஏற்காதவர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறி மனுவை முடித்து வைத்தனர்.     

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..
images 39 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories