கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தல்..

திருநெல்வேலி-மயிலாடுதுறை, செங்கோட்டை-மதுரை ரயில்கள் உட்பட கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கவும் பயணிகள் ‌ரயிலை விரைவு ரயில் கட்டணத்தில் இயக்குவதை தவிர்த்து பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா வால் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் – மதுரை, கொல்லம் – புனலூர், ரயில் ஜூன் 22முதலும் கன்னியாகுமரி – ராமேஸ்வரம்-கன்னயாகுமரி ஜூன்27முதல் இயங்குகிறது. நாகர்கோவில் – காச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் சேவை ஜூலை 2 முதல் மீண்டும் துவங்க இருக்கிறது.

images 43 - 2026

ராமேஸ்வரம் – மதுரை – ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ஜூன் 22 முதல் இயக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இந்த பகுதியில் மூன்று ஜோடி முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ராமேஸ்வரத்திலிருந்து காலை 11.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.40 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை – ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மாலை 04.10 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும் இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 9 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

கொல்லம் – புனலூர் – கொல்லம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் ஜூன் 22 முதல் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி கொல்லம் – புனலூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06666) கொல்லத்தில் இருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மாலை 06.55 மணிக்கு புனலூர் வந்து சேரும். மறுமார்க்கத்தில் புனலூர் – கொல்லம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06661) புனலூரில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு இரவு 09.05 மணிக்கு கொல்லம் சென்று சேரும். இந்த ரயில்கள் அவனீஸ்வரம், குறி, கொட்டாரக்கரா, எழுகோன், குன்டரா கிழக்கு, குன்டரா, சந்தன தோப்பு, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேஸ்வரம் – கன்னியாகுமரி – ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில்கள் ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 27 முதலும் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 28 முதலும் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி ராமேஸ்வரம் – கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் (22621) ராமேஸ்வரத்திலிருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி – ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் (22622) கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கன்னியாகுமரி – ராமேஸ்வரம் ரயில் நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுத்திய வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

FB IMG 1655688978092 - 2026

நாகர்கோவில் – காச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் சேவை ஜூலை 2 முதல் மீண்டும் துவங்க இருக்கிறது.

காச்சிகுடாவிலிருந்து முதல் சேவை ஜூலை 3 அன்று துவங்கும்.அதன்படி நாகர்கோவில் – காச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் (16354) நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.25 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் காச்சிகுடா – நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (16353) காச்சிகுடாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 07.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரக்குன்ட்லா, தாடிபத்திரி, கூட்டி, கர்னூல்நகர், கட்வால், மெஹபூப் நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கான பெட்டி, ஒரு சமையல் சாதனப்பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டி இணைக்கப்படும்.நாகர்கோவில் – காச்சிகுடா ரயிலுக்கு யெர்ரக்குன்ட்லாவில் நிறுத்தம் கிடையாது.
இதுபோல் கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட திருநெல்வேலி-மயிலாடுதுறை, செங்கோட்டை-மதுரை ரயில்கள் உட்பட கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கவும் பயணிகள் ‌ரயிலை விரைவு ரயில் கட்டணத்தில் இயக்குவதை தவிர்த்து பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories