December 8, 2025, 8:25 AM
22.7 C
Chennai

கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள்..

images 91 1 - 2025

விநாயகர் சதுர்த்தி கோயில் விழாக்கள் காரணமாக கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தினமும் தமிழகத்தின் பல்வேறு நகர்புறங்களுக்கு தினமும் 2200 பஸ்கள் இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதோடு முகூர்த்த நாளாகவும் இருப்பதால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திருமணங்கள், சுபகாரியங்கள் நடக்கின்றன. இதனால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்கக் கூடும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. ஏ.சி. படுக்கை பெட்டியிலும் இடமில்லை. இதனால் காத்திருப்போர் பட்டியல் 300-க்கு மேலாக உள்ளது.

நேற்று முகூர்த்த நாளாக இருந்ததால் வெள்ளி சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை மட்டுமின்றி பிற நகரங்களிலும் பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை அரசு விடுமுறையாகும். அதனால் இன்று மாலையில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தினமும் தமிழகத்தின் பல்வேறு நகர் புறங்களுக்கு தினமும் 2200 பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விழுப்புரம், சேலம், கும்பகோணம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் தேவையை சமாளிக்க சிறப்பு பஸ்கள் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, திருச்சி, ஓசூர், பெங்களூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை கூட்ட நெரிசலை சமாளிக்க தேவையான அரசு பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம். வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா தொடங்கி இருப்பதால் வேளாங்கண்ணிக்கும் தேவையான அளவு பஸ்களை இயக்குகிறோம். புதுச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்களில் இடம் இல்லாததால் அரசு பஸ்களை நம்பி பயணம் செய்ய மக்கள் கூடுவார்கள். அதற்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் கோயம்பேட்டில் முகாமிட்டுள்ளனர். மாலையில் இருந்து வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கோயம்பேடு பஸ் நிலையம் காலை முதலே பரபரப்பாக காணப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories