முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கொண்டாடிய சதுர்த்தி விழா…

850201 muthumalai - 2026

முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுடன் சதுர்த்தி விழாவை வனத்துறையினர் கொண்டாடினர்.இந்த சதுர்த்தி விழாவில் மணி அடித்தபடி விநாயகரை வளர்ப்பு யானைகள் வலம் வந்தது. பின்னர் தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டவாறு வணங்கியது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுடன் சதுர்த்தி விழாவை வனத்துறையினர் கொண்டாடினர்.

இதற்காக வளர்ப்பு யானைகள் மாயாற்றில் குளிப்பாட்டப்பட்டது. பின்னர் சந்தனம் மூலம் வளர்ப்பு யானைகளை பாகன்கள் அலங்கரித்தனர். ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தபடி நடனம் ஆடினர். பின்னர் புலிகள் காப்பக துணை இயக்குனர் திவ்யா முன்னிலையில் முகாம் வளாகத்தில் உள்ள கோவிலில் விநாயகருக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அப்போது வளர்ப்பு யானைகள் தும்பிக்கையில் வைத்திருந்த மணியை அடித்தபடி கோவிலை வலம் வந்தது. பின்னர் விநாயகருக்கு மரியாதை செய்யும் வகையில் தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டபடி வணங்கியது. இதைத்தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் கரும்பு, தேங்காய், வெல்லம், ஆப்பிள், மாதுளை, அன்னாசி, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பழங்களை வனத்துறையினர் யானைகளுக்கு வழங்கினர். இதேபோல் ராகி, கேழ்வரகு உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளும் அளிக்கப்பட்டது.

850204 muthumalai 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories