மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வு -அர்ஜூன் சம்பத்..

மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் குறைவு என மக்களை ஏமாற்ற வேண்டாம்- தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தின்டுக்கல்லில் அரசு வழங்கிய இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதனை தலையில் சுமந்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சியினர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அதன் பின்னர் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது,

தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள மின்துறை அமைச்சர் குஜராத், ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் மின் கட்டணம் குறைவு என கூறுகிறார். இதைச் சொல்லி மக்களிடம் இருந்து தப்பித்து விட முடியாது.

கடந்த 16 மாதங்களில் தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாக மாறியுள்ளது. முதல்-அமைச்சர் மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ள நிலையில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் இது போல் பேசியுள்ளார். கட்சியில் கனிமொழி எம்.பி. புறக்கணிக்கப்படுகிறார். முதல்-அமைச்சரின் மனைவி துர்கா, மருமகன் சபரீசன் ஆகியோரை மனதில் வைத்து ஆ.ராசா இவ்வாறு பேசி இருக்க கூடும். எனவே இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர்தான் கோபமடைய வேண்டும். தி.மு.க.வில் 1 கோடி இந்துக்கள் உள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அவ்வாறு உள்ள போது ஆ.ராசா பேசியது அவர்களை அவமதிப்பது போல் அமையும். எனவே அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1500x900 1763041 arujun - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories