முதல் முறையாக கூகுள் கேப்பிடல் இந்தியாவின் தனது கிளையைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அதன் தொழில்நுட்பக் குழுவை மேற்கோள் காட்டி, கூகுள் செய்தித் தொடர்பாளர் இதனை அறிவித்துள்ளார். இந்தியாவை மையமாக வைத்து கூகுள் கேப்பிடல் ஒரு பிரதிநிதியை நியமிக்கவுள்ளது. ஆனால் அவர் எந்த இடத்தில் இருந்து நியமிக்கப் படுவார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. கூகுள் கேபிடலின் பங்குதாரர் டேவிட் லாவ் இது குறித்துத் தெரிவித்த போது, தெற்காசிய நாடுகளில் ஸ்மார்போன்கள் விற்பனை மற்றும் பயனாளிகள் அதிகரித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் இதனை மையப் படுத்தி அமைப்பது மிகவும் சரியானதாக இருக்கும். கூகுள் கேபிடல் ஏற்கெனவே ரியல் எஸ்டேட் போர்டலான காமன்ஃப்ளோர், இந்திய அமெரிக்க நிறுவனமான ஃப்ரெஷ்டெஸ்க் உள்ளன. இந்நிலையில் இந்தியாவின் கூகுள் கேபிடலின் இந்திய கிளை மூலம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
கூகுள் கேப்பிடல் இந்தியாவில் கிளையைத் திறக்கிறது!
Popular Categories