வனப்பகுதியில் காட்டுத்தீ சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தொடரும் தடை..

IMG 20221007 WA0008 - 2026
IMG 20221007 WA0007 - 2026

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோயிலுக்கு செல்ல மலையேற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாணிப்பாறைக்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட பீட் நம்பர் 4 வல்லாளம்பாறை பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தீயால் பலவகை அரிய மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

IMG 20221007 WA0015 - 2026

ஆனால் அப்பகுதியில் அதிகமாக காற்று வீசியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது நாளாக நேற்று இரவும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

மேலும் மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மலையில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் தீவிர சோதனையும் நடத்தினர். பக்தர்கள் செல்ல தடை இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் வனப்பகுதியில் பற்றிய காட்டு தீயை அணைத்தால் மட்டுமே நாளை மறுநாள்‌அக்9-ந் தேதி நடைபெற உள்ள பௌர்ணமி பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், தீ அணையாத பட்சத்தில் பவுர்ணமிக்கும் தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் தடை செய்யப்பட்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

IMG 20221007 WA0017 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories