T20 WC 2022: நேர்மையற்ற கணக்கு

t20wc - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பேமானிக் கணக்கு… அப்படித்தான் சொல்ல வேண்டும். பதினாறு அணிகளைக் கொண்டு கடந்த அக்டோபர் பதினாறாம் தேதி முதல் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் 12 சுற்றிற்கு நேரடியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய எட்டு அணிகள் தேர்வு பெற்றன. மீதமுள்ள 4 அணிகள் இலங்கை வெஸ்ட் இண்டீஸ் ஸ்காட்லாந்து அயர்லாந்து நெதர்லாந்து நமிபியா யுஏஇ ஜிம்பாப்வே ஆகிய எட்டு அணிகள் விளையாடிய தகுதி சுற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள், ஆஸ்திரேலியா நியூசிலாந்து இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ள ஒன்றாவது குழுவில் நுழைந்தன.

ஜிம்பாவே மற்றும் நெதர்லாந்து அணிகள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இடம்பெற்ற இரண்டாவது குழுவுக்குள் நுழைந்தன. இந்த நிலையில் பிரதான சுற்று ஆட்டங்கள் 75% மேல் முடிந்த நிலையில் ஒன்றாவது குழுவில் நியூசிலாந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் அரை இறுதிக்கு செல்லும் இரண்டு அணிகளுக்கான இடத்திற்கு போட்டியிடுகின்றன.

அதேபோல் இரண்டாவது குழுவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கான இரண்டு இடங்களுக்காக போட்டியிடுகின்றன.

இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு அடுத்து பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் தலா ஒரு போட்டி இருக்கிறது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி ஐந்து புள்ளிகள் உடன் இருக்கிறது.

இந்திய அணிக்கு அடுத்து ஜிம்பாப்வே அணி உடன் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டி மீதம் இருக்கிறது.

தற்பொழுது இந்திய அணி 6 புள்ளிகளுடன் இருக்கிறது.என்ன நடக்கலாம்? பாகிஸ்தான் அணிக்கு நாளை தென்னாபிரிக்க அணியுடனும் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் அணியுடனும் இரண்டு போட்டிகள் இருக்கிறது.

தற்பொழுது பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது.சீனரியொ-1 இந்திய அணி தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணி உடன் தோற்று, பாகிஸ்தான் அணி தனது இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்க அணி தனது கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணி 7 புள்ளிகள் உடனும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் தலா ஆறு புள்ளிகளுடனும் இருக்கும்.

இதில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி அதிக ரன் ரேட்டில் இருந்தால் பாகிஸ்தான் அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் அரை இறுதிக்கு முன்னேறும்.

சீனரியொ-2 நாளை தென்னாபிரிக்கா அணியுடனோ, ஞாயிறு பங்களாதேஷ் அணியுடனோ பாகிஸ்தான் அணி தோற்றாலோ, இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வென்றாலோ, இந்திய அணி சுலபமாக அரையிறுதிக்குள் நுழைந்து விடும்

சீனரியொ-3 அதே சமயத்தில் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி, இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இருக்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியுடனும் நெதர்லாந்து அணியுடனும் தோல்வியைத் தழுவினால், இந்தியா பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எப்படியிருக்கிறது பேமானிக் கணக்கு; அதாவது நேர்மையற்ற கணக்கு?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories