துபாயில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்..

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல் மூலம் உடற்பயிற்சி கருவியில் மறைத்து கடத்திய ரூ.2½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல் மூலம் உடற்பயிற்சி கருவியில் மறைத்து கடத்திய ரூ.2½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பார்சலில் கடத்தல் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

இங்கிருந்து வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் செல்கின்றன. மேலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான விமானங்கள் பெங்களூருவுக்கு வருகின்றன. பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருள் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், துபாயில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அதிகாரிகள் பெங்களூரு விமான நிலையத்தில் பார்சல் பிரிவுக்கு சென்று வெளிநாடுகளில் இருந்து வந்த பார்சல்களை பரிசோதனை செய்தனர். ரூ.2.45 கோடி தங்கம் பறிமுதல் அப்போது துபாயில் இருந்து வந்த ஒரு பார்சலில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, உடற்பயிற்சி செய்யும் டிரெட்மில் கருவி இருந்தது. மேலும் அதனை சோதனை செய்தபோது, அதற்குள் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதனால் உடற்பயிற்சி கருவியில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த உடற்பயிற்சி கருவியில் உருளை வடிவில் இருந்த 4 கிலோ 725 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2.45 கோடி ஆகும். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் உடற்பயிற்சி கருவி யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

images 55 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories