மக்களின் 8 ஆண்டு சட்ட போராட்டம் வெற்றி; அமைதி நிலவ தக்க நடவடிக்கை தேவை!

hindumunnani - 2026

மக்களின் 8ஆண்டு கால சட்ட போராட்டம் வெற்றி – அமைதி நிலவ அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

kadeswara subramanian - 2026
kadeswara subramanian

திருப்பூர் மாநகர் வெங்கடேஷ்வரா மகாலட்சுமி நகர் மக்கள் தங்கள் பகுதியில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்டி வேறுபகுதி முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டதன் பேரில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி இது சட்டவிரோதமான தொழுகைக் கூடம், இங்கே தொழுகை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அதனை மதிக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு விசாரணையில் 2016 ஆம் ஆண்டு அந்தக் கட்டிடம் எதற்காக அனுமதி பெறப்பட்டதோ அதற்காகத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் தொழுகை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால் மாண்புமிகு நீதி மன்றத்தின் உத்தரவை அவர்கள் மதிக்கவில்லை.

மீண்டும் அந்த மக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்கள். கடந்த 6 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்து விசாரணை நடைபெற்றது. பல்வேறு காலகட்டத்தை கடந்து இன்று (9.11.22) இனிமேல் அங்கு சட்டவிரோதமாக தொழுகை நடத்த மாட்டோம் என்றும் அரசிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகு தொழுகை நடத்துவோம் என்று முஸ்லிம்கள் தரப்பில் அபிடவிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தொழுகையை நிறுத்த வேண்டும் என்றும், அதை மீறி தொழுகையை நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கின்றார்கள்.

8 ஆண்டு காலம் அந்த மக்களினுடைய வேதனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த பகுதியில் பல்வேறு இடையூறுகள், மிரட்டல்கள் இதற்கு இடையில் அந்த மக்கள் போராட்டத்திற்கு சட்ட ரீதியான வெற்றி கிடைத்துள்ளது.

மீண்டும் அந்த பகுதியில் பதட்டம் ஏற்படாமல் அங்கு இருக்கிற மக்கள் அமைதியாக சுமூகமாக வாழ்வதற்கும், சட்ட விரோத தொழுகை கூடம் அமையாமலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த பகுதியில் அமைதியை அரசு உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories