அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு!

madurai chozhavanthan vaigai - 2026

சோழவந்தான்: சோழவந்தானில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கழிப்பறை கட்டும் ஆளுங்கட்சியினர். போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில்.அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளை ஆளுங்கட்சியினர் தொடங்கிய நிலையில் அந்த இடம் சாமி ஊர்வலம் வரும் எனவும் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் மிகவும் நெருக்கடியான இடம் என்றும் ஆகையால் கழிப்பறையை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் சென்று முறையிட்டனர் .

தகவல் அறிந்து, உடனடியாக அங்கு வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , பொதுமக்களுடன் பேசி சமாதானம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவே இந்த இடத்தில் கழிப்பறை கட்ட முடிவு செய்துள்ளதாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் வேறு இடத்திற்கு கழிப்பறை கட்டும் திட்டத்தை மாற்றிக் கொள்வதாகவும்  உறுதி அளித்து சென்றார் .

madurai chozhavanthan vaigai1 - 2026

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மீண்டும் பணிகளை தொடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  ஏற்கனவே, வைகாசி திருவிழாவின் அக்கினி சட்டி பால்குடம் மற்றும் தீர்த்தவாரி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நாள் போன்ற தினங்களில் பல ஆயிரம் மக்கள் இந்த பகுதி வழியாக வைகை ஆற்றுக்குள் செல்வது வழக்கம் .

அந்த நேரங்களில் மிகவும் நெருக்கடியான இடம் என்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறைக்கும் சவாலாக இருக்கும். இந்த நிலையில்,  கழிப்பறை கட்டுவதால் இடம்நெருக்கடியாகி  மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் ஆகையால் ,அருகில் உள்ள சனீஸ்வரன் கோயில் பகுதி அல்லது அய்யாவார்தெரு பகுதி ஆகிய இடங்களில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

 தொடர்ந்து கழிப்பறை கட்டும் கட்டுவதை கைவிடாவிட்டால், பொதுமக்களை ஒன்று திரட்டி போராட போவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories