உதயநிதி பிறந்த நாள்-கபடிபோட்டி நடத்துவதில் திமுகவினரிடையே தகராறு..

916112 - 2026

திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகரம் பெருங்களத்துார் தெற்கு பகுதி திமுக சார்பில், இரும்புலியூர் டிடிகேநகர் மைதானத்தில் நேற்று கபடிபோட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்நிகழ்ச்சி நடைபெற்றால் சட்டம்- ஒழுங்குபிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் தரப்பில் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனால் எம்எல்ஏ ஆதரவாளர்கள் திரண்டு வந்து போட்டியை நடத்தக் கூடாது எனத் தடுத்தனர். அதேநேரத்தில், போட்டியை தொடக்கிவைக்க, அமைச்சர் அன்பரசனின் ஆதாரவளரான மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் வந்தனர்.

ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் நிலவியது. பின்னர் வாய்த் தகராறு ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டன.

தாம்பரம் மாநகர திமுகவில் சமீபகாலமாக கோஷ்டி பூசல் அதிகரித்துவிட்டது. எம்எல்ஏ மற்றும் அமைச்சர் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் போட்டியில் பங்கேற்க வந்த கபடி வீரர்கள் பல மணி நேரமாக காத்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories