February 23, 2026, 6:09 AM
25 C
Chennai

சென்னையில் இளநிலை ‘சித்தா’ படிப்பு தொடங்க மத்திய அரசு அனுமதி!

tambaram sidha college - 2026

சென்னை: இளநிலை ‘சித்தா’ படிப்பு தொடங்க மத்திய
அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், இளநிலை சித்த மருத்துவப் படிப்பு தொடங்க மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் 14.78 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை 2005-–ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார்.

அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்ற பெயரில் இயங்கி வரும் இந்த மருத்துவமனை வளாகத்தில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் அமைந்துள்ளது. மேலும், 200 படுக்கைகளுடன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.

தினமும் 2,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், இங்கு 8 சித்த மருத்துவத் துறைகளில் எம். டி. சித்தா மேற்படிப்பும், 6 துறைகளில் பிஎச்.டி. சித்த மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு இளநிலை சித்த மருத்துவப் படிப்பு தொடங்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2022-– 23) இளங்கலை சித்த மருத்துவப் பட்டப் படிப்பு (பிஎஸ்எம்எஸ்) தொடங்க மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும், இந்திய மருத்துவமுறைகளுக்கான தேசிய ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நாட்டிலேயே மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் முதல்முறையாக இளநிலை சித்த மருத்துவப் படிப்பு இங்கு தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநரும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநருமான ஆர்.மீனாகுமாரி கூறியதாவது: நடப்பு கல்வி ஆண்டில் 60 இடங்களுடன் பிஎஸ்எம்எஸ் பயிற்றுவிக்க அனுமதி கிடைத்துள்ளது.

இதில் 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். எஞ்சிய 30 இடங்களை மருத்துவ நிறுவனம் கலந்தாய்வு நடத்தி நிரப்பும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயுஷ் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவ நிறுவனம் நடத்தும் கலந்தாய்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடக்க உள்ள மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலேயே கல்லூரி செயல்படத் தொடங்கும். அருகில் உள்ள சிட்லபாக்கத்தில் மருத்துவ நிறுவனத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம்உள்ளது. அங்கு கல்லூரிக்கு புதியகட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பணி முடிந்த பிறகு, அங்கு கல்லூரி செயல்படும் என அவர் கூறினார்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னை அரும்பாக்கம் அறிஞர்அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 160 இடங்களும், 9 தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் 490 இடங்களும் இளநிலை சித்த மருத்துவப் படிப்புக்கு உள்ளன. இவற்றுக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. இதற்கிடையே, சென்னை மாதவரத்தில் 25 ஏக்கரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதேபோல, அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசிடம் தமிழகஅரசு முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories