காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பூஜைகளால், மந்திரங்களால் நிறைந்தது இந்தியா: ஆளுநர் ஆர்.என்.ரவி

governor rn ravi - 2026

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்தால், இந்த நாடே பூஜைகளாலும், மந்திரங்களாலும் நிரம்பி இருப்பதை உணர முடியும் என்று ஆளுநர் ரவீந்திரநாராயண் ரவி தெரிவித்தார்.

இந்திய நுண்கலைகள் குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு சென்னை ஐஐடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:

இந்தியாவின் எதிர்காலமாக திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்கள் நம் நாட்டின் ஆன்மிகம், கலாச்சாரத்தின் சிறப்பை அறிந்து கொள்ள ஆசிரியர்கள் வழிசெய்ய வேண்டும். இந்தியாவின் கலாச்சாரம் வெவ்வேறாக இருந்தாலும் அனைத்துமே ஆன்மிகம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைகின்றன.

ஆன்மிகம், கலை, கலாச்சாரம் ஆகிய கருத்துகளால் நிரம்பியது நமது அரசியலமைப்பு. நமது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை (Secularism) எனும் சொல்லுக்கு தவறான புரிதல் உள்ளது. அந்த ஆங்கில வார்த்தைக்கான ஐரோப்பிய அர்த்தத்தையே இன்று வரை பின்பற்றி வருகிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்தால், இந்த நாடே பூஜைகளாலும், மந்திரங்களாலும் நிரம்பி இருப்பதை உணர முடியும்.

மக்களுக்கான அடிப்படை உரிமைகளை எடுத்துரைக்கும் ராம ராஜ்ஜிய கருத்துகள்தான் அரசியலமைப்பில் அடங்கி யுள்ளன. அதை மக்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லை. மாறாக, நமது மாணவர்களுக்கு ஆன்மிகம் இல்லாதஅரசியலமைப்பு கற்றுத் தரப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்நிலை மாற வேண்டும்.

மேற்கத்திய நாடுகள் அடக்குமுறைகளாலும், வன்முறையாலும் உருவானவை. மாறாக, நமது பாரதம் பக்தியால் உருவானது. எது பாரதம் என்பதை கலைகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், கர்னாடக இசைக்கலைஞர் டி.வி.கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories