December 5, 2025, 9:32 PM
26.6 C
Chennai

எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஒருமாதம் நீட்டிப்பு..

FB IMG 1672797004515 - 2025

தமிழக கேரளா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று இயங்கும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் கடந்த சனிக்கிழமை யுடன் முடிந்த நிலையில் தற்போது ஜனவரி இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளது .இதற்கான முன் பதிவு இன்று துவங்குகிறது.பல ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயங்கும் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க தமிழக கேரள பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், செங்கோட்டை ,ராஜபாளையம் விருதுநகர், காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை சென்றடையும் வகையிலும், வேளாங்கண்ணியில் இருந்து இதே வழித்தடத்தில் எர்ணாகுளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு எர்ணாகுளத்திற்கு திங்கள் கிழமை சென்றடையும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது .

இந்த சிறப்பு ரயில் கடந்த சனிக்கிழமை உடன் இறுதி பயணத்தை நிறைவு செய்தது பல்வேறு தரப்பினரும் இந்த ரயிலை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் மாணவர்கள் நலன் கருதி தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வந்தனர் .

இந்த நிலையில் தென்னக ரயில்வே இந்த ரயிலை ஜனவரி மாதம் முழுவதும் நீடித்து இதை வழித்தடத்தில் அதே நேரத்தில் இயக்குவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ரயில் விரைவில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது கேரளா தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே ரயில்வே வாரியம் இந்த ரயிலை வாரம் இரு நாள் இயக்க அனுமதி கொடுத்தும் இதுவரை தென்னக ரயில்வே இயக்காமல் சிறப்புரயிலாகவே இயக்கி வருகிறது என்பதும் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும் குருவாயூரிலிருந்து கொல்லம் வழியாக புனலூர் வரை வந்து மீண்டும் குருவாயூர் செல்லும் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக மதுரை வரை நீடித்து இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் தாம்பரம் எர்ணாக்குளம் -தாம்பரம் இடையே கொல்லம் ராஜபாளையம் காரைக்குடி வழியாக செல்லும் சிறப்பு ரயிலை தொடர்ந்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது கேரளா தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories