மலையாள கவிஞர்,ஸ்ரீகுமரன் தம்பி க்கு, இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது..

Published:

FB IMG 1673703046502 - 2026


மலையாளத்தின் பிரபலமான கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஸ்ரீகுமரன் தம்பி க்கு, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.இந்த பிரபலமான விருதினை சபரிமலை சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் பக்தி பரவசத்த்துடன் ஸ்ரீகுமரன் தம்பிபெற்றுக்கொண்டார்.

தேவஸ்வம் அமைச்சர் ஸ்ரீ கே. ராதாகிருஷ்ணன் அவருக்கு விருது வழங்கினார். விருது பெறும் நேரத்தில், சன்னிதானம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழிந்ததால், ஐயப்ப பக்தர்கள் பெரிய நடைபாதையை நிரப்பி, சரணம் முழக்கமிட்டு விருது பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சரண மந்திரம் இடைவிடாமல் உச்சரிக்கப்பட்டது, பக்தர்கள் இதயத்தை சூடேற்றியது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img