துருக்கி, சிரியா எல்லையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..

1130730 afp 3 - 2026

இன்று துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் ‌இன்று‌ மாலை  மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவு ஏற்பட்டுள்ளதாக ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து துருக்கி, சிரியாவில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 100 பேர் கொண்ட 2 இந்திய குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லையில் உள்ள நகரங்களின் பல ஆயிரம் கட்டடங்கள் குலுங்கின. பல நூறு வீடுகள் முற்றிலும் இடிந்து சிதறி சேதமடைந்துள்ளன. 10 மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 3000 பேர் காயமடைந்துள்ளதாகவும் 1,700க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1130733 afp 6 - 2026

இந்தச் சூழலில் துருக்கியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு மீண்டும் இப்போது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கி மட்டுமின்றி சிரியாவில் டமாஸ்கஸ், லதாகியா உள்ளிட்ட பகுதிகளிலும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சியில் இருந்தே அங்குள்ள பொதுமக்கள் இன்னும் மீளாத நிலையில், இப்போது இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் அங்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியின் முக்கிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் தொடங்கிப் பல நகரங்களில் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலான கட்டிடங்கள் இல்லை. இதன் காரணமாகவே அப்படியே அங்குள்ள கட்டிடங்கள் சரிந்துள்ளன. துருக்கி நாட்டில் மட்டும் 2800க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அப்படியே சரிந்துள்ளன.

இந்த இரண்டாவது நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. முதல் நிலநடுக்கத்திலேயே துருக்கி  சிரியா நாட்டில் சுமார் 1200க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. மீட்புப் பணிகள் இப்போது தான் தொடங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதில் காயமடைந்த பல ஆயிரம் பேருக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

screenshot37502 1675682712 - 2026

இந்த நிலையில் துருக்கி மக்களுக்கு துணையாக 140 கோடி பேர் இருக்கின்றனர்.. உதவ இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் துருக்கி, சிரியாவில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 100 பேர் கொண்ட 2 இந்திய குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

1130735 afp 8 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories