நெல்லை மதுரை கோவை வழியாக கூடுதல் ரயில் இயக்கப்படுமா..

FB IMG 1671430410433 - 2026

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்களை உடன் இயக்கவும் ,வடமாநிலங்களில் இருந்து மதுரை வரை வரும் ரயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்யவும் , நீண்ட நாட்களாக சிறப்பு ரயில்களும் இயங்கும்‌ ரயில்களை நிரந்தரமாக இயக்கவும், தமிழகத்தில் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதை மதுரையில் நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் ரயில்வே வளர்ச்சி ஆய்வுக் கூட்டத்தில் தமிழக எம்.பி.,க்கள் ஒருங்கிணைந்து வலியுறுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் சென்னை ரயில்வே தலைமையக அதிகாரிகள், தலைமை பொறியாளர்கள், கட்டுமான பிரிவு, ரயில் இயக்கம், இயந்திரவியல், பாதுகாப்பு பிரிவு என முக்கிய அதிகாரிகள் குழு பங்கேற்கிறது. இதில் மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை,, விருதுநகர், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி எம்.பி.,க்கள் பங்கேற்க ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது. வைகோ எம்.பி.யும் பங்கேற்கவுள்ளார்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ரயில் வழித்தடங்கள் பெரும்பாலும் இரட்டை ரயில் பாதைகளாக மாற்றியமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சில கூடுதல் ரயில்கள் தவிர, மீட்டர் கேஜ் வசதி இருந்தபோது இயக்கப்பட்ட ரயில்களே இன்னும் இயக்கப்பட்டு வருகின்றன.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

தற்போது இரட்டை ரயில் பாதைகள் பணி முடிந்ததால் பயண நேரம் வெகுவாக குறையும். எனவே தென் மாவட்ட நகரங்களை இணைக்கும் விதமாக சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்களை நீட்டிக்க வேண்டும் என்பதை முதன்மையாக வலியுறுத்த வேண்டும்.

கன்னியாகுமரி சென்னை இடையே நாகர்கோவில் நெல்லை மதுரை திருச்சி யில் நின்றுசெல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்.

குருவாயூர் புனலூர் ரயிலை மதுரை வரை செங்கோட்டை வழி நீட்டிப்பு செய்யவும்,இதுபோல் தென் மாவட்டங்களில் வர்த்தக பகுதிகளான விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி உள்ளிட்ட நகர்களை இணைக்கும் வகையில் கோவில்பட்டியில் இருந்து தினமும் திண்டுக்கல்லுக்கு ரயில்கள் இயக்க வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு பெரும் பயனாக இருக்கும்.கொல்லம் -செங்கோட்டை -மதுரை — கோவை (பழநி, பொள்ளாச்சி வழி) வழித்தடம் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது தினம் 6 ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் ரூ.750 கோடி செலவிட்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின் தினம் ஒரு ரயில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

கோவையில் இருந்து மதுரை விருதுநகர் செங்கோட்டை வழி கொல்லத்திற்கும், திருநெல்வேலி -தென்காசி -மதுரை-கோவை வழியில் மேட்டுப்பாளையத்திற்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.மதுரையில் சென்னையை அடுத்து அதிக எண்ணிக்கையிலான பயணிகள் கோவை பகுதிக்கு செல்கின்றனர்.

எனவே இந்த வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்கள் இயக்க வலியுறுத்த வேண்டும்.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவை வரை ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவதுடன் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.


கொல்லம், செங்கோட்டை மதுரை‌ வழி ராமேஸ்வரம் திருப்பதிக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும்.பகல்நேர ரயில்கள் இயக்குவோம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துாத்துக்குடி – பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இதுவரை இயக்கப்படவில்லை. அதை விரைவில் இயக்க வேண்டும். தற்போது துாத்துக்குடி – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஈரோடு வழியாக இயங்கிக்கொண்டிருப்பதை சேலம் வழியாக இயக்கினால் பயண நேரம் குறையும்.


தற்போது மீண்டும் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில்கள் இயங்குவதால் கூடல்நகர் ஸ்டேஷனில் வசதிகள் இருந்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது‌.தற்போது மதுரை ரயில்வே கோட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடம் உள்ளிட்ட வேலை வாய்ப்புக்கள் திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி.,யால் நிரப்பப்பட்டு வருகின்றன.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

இதை, ஏற்கெனவே இருந்தது போல் சென்னை ஆர்.ஆர்.பி., மூலம் மதுரைக் ரயில்வே கோட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் மாற்றம் கொண்டுவர எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும்‌என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Youtube
Telegram
Pinterest

       

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Entertainment News

Popular Categories