December 8, 2025, 12:58 AM
23.5 C
Chennai

இன்று சோதனை ஓட்டம் கண்ட சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில்

இன்று சோதனை ஓட்டம் கண்ட

images 100 - 2025
#image_title
சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 5 மணி 40 நிமிடத்தில் சென்றடைந்துள்ளது

வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும்.

சென்ட்ரல்-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் 12-வது தயாரிப்பு சென்ட்ரல்-கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலாகும். 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகிறது.

ஆனால் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த வழி தடத்தில் சதாப்தி, இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாலும் 16 பெட்டிகள் இயக்கினால் காலியாக ஓடும் என்பதாலும் 8 பெட்டிகளாக குறைத்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரெயில் பெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள நிலையில் இன்று சோதனை ஓட்டம் மேற் கொள்ளப்பட்டது.

சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். 8 பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று சென்றது.

130 கி.மீ. வேகத்திற்கு இந்த ரெயிலை இயக்க முடியும் என்றாலும் அதைவிட குறைந்த வேகத்திலேயே இயக்கி சோதனை செய்யப் பட்டது. மற்ற ரெயில்களை விட குறைவான நிறுத்தம், வேகம் அதிகரிப்பு காரணமாக வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 6½ மணி நேரமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் சரியாக காலை 11.20 மணிக்கு கோவை சென்றடைந்தது. 5 மணி 40 நிமி டத்தில் ரெயில் கோவையை அடைந்தது. இதன்மூலம் ரெயில் சோதனை ஓட்டம் திட்டமிட்டப்படி நடந்துள்ளது.

பிற்பகல் கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் இரவு 8 மணிக்கு முன்னதாக சென்ட்ரல் வந்து சேருகிறது. வாரத்தில் ஒரு நாள் தவிர 6 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

சோதனை ஓட்டத்தின் போது ஏதாவது தொழில் நுட்ப கோளாறு, பிரச்சினை ஏற்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories