இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்..

images 60 - 2026
#image_title
  • இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம் கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகமாகும்.ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்களை விட 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
  • தேசிய மருத்துவ வாரிய சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை, முதுநிலை பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்திய அரசின், தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது.
  • இந்த ஆண்டு மே 7-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11.8 லட்சம் பேர் மாணவிகள். கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் கூடுதலாகும். இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. மாணவர்களை விட 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
  • மகாராஷ்டிராவில் 2.8 லட்சம் பேரும், உத்தரபிரதேசத்தில் 2.7 லட்சம் பேரும் மற்றும் ராஜஸ்தான் , தமிழ்நாடு, கர்நாடக, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த 2020-ம் ஆண்டை விட தற்போது 11.5 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்துள்ளனர். ஓ.பி.சி. பிரிவில் 8.9 லட்சம் பேரும், எஸ்.சி. பிரிவில் 3 லட்சம் பேரும், எஸ்.டி. பிரிவில் 1.3 லட்சம் பேரும், பொது பிரிவில் 6 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி ஹோமியோபதி படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை காரணம் காட்டி சமூக ஆர்வலர்கள் பலர் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி அட்டவணைப்படி தேர்வு நடத்தப்படும் என்று அரசு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories