மதிமுகவை, திமுகவுடன் இணைக்கும் ஐடியா இல்லை-வைகோ 

images 17 - 2026
வைகோ

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் ஐடியாவும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ திட்டவட்டமான விளக்கமளித்துள்ளர். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

மதிமுக முக்கிய காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை, மதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக நிராகரிக்கிறேன். கட்சியை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை.

மதிமுக 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது, இனியும் தொடர்ந்து தனித்தே இயங்கும். அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, 2 வருடமாக கட்சியில் சரியாக செயல்படவில்லை. மதிமுகவினர் வற்புறுத்தியதால்தான் என் மகன் துரைவைகோ அரசியலுக்கு வந்தார்.ஜனநாயக முறைப்படி கட்சியில் அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதிமுக அவைத் தலைவா் துரைசாமி திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுகவில் இருந்து மதிமுக பிரிந்து வந்தபோது, வாரிசு அரசியலுக்கு எதிராக பொதுச் செயலா் வைகோ குரல் கொடுத்தாா். இப்போது உள்கட்சித் தோ்தலில் துரை வைகோவுக்கு வேண்டப்பட்டவா்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா். 

அப்போது, சிலரது தூண்டுதலின்பேரில்தான் நீங்கள் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருவதாக துரை வைகோ கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவரது கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில நாள்களில் வைகோவிடம் இருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்றாா். இதனிடையே மதிமுகவை திமுகவோடு இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோவுக்கு அக் கட்சியின் அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி கடிதம் எழுதியுள்ளாா். 

இது தொடா்பாக மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ விளக்கம் அளித்துள்ளாா். வைகோவுக்கு துரைசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: லட்சக்கணக்கான தோழா்கள் தங்களின் (வைகோ) பேச்சில் உறுதியும் உண்மையும் இருக்கும் என்று நம்பி ஆதரித்தனா். ஆனால், தங்களின் குழப்ப அரசியல் நிலைப்பாட்டால், கட்சியிலிருந்து விலகி தற்போது பலா் திமுகவுக்கே சென்றுவிட்டனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன. 

மக்களவைத் தோ்தலில் மதிமுகவுக்கு திமுகவில் எத்தனை இடங்கள் ஒதுக்குவாா்கள் என்பதே தெரியாத நிலையில், விருதுநகரில் ஒருவா் (துரை வைகோ) பெயரைக் குறிப்பிட்டு அவா் போட்டியிடுவாா் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி மாவட்டத்திலும் அதுபோல தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். எந்த அரசியல் கட்சியும் பதவி கேட்டு இப்படித் தீா்மானம் நிறைவேற்றியது இல்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்களின் குடும்ப மறுமலா்ச்சிக்குத்தான் என்பதை உங்களின் செயல்பாடுகள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

கடந்த 30 ஆண்டுகளாக உங்களின் உணா்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழா்களை மேலும் ஏமாற்றம் அடையச் செய்யாமல் இருக்க மதிமுகவை தாய்க்கழகமான திமுகவுடன் இணைப்பதே சாலச்சிறந்தது என்று அதில் கூறியுள்ளாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories