சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது தீ-ஒருவர் மரணம்..

991587 - 2026
சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது தீ-

சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது இன்று பிற்பகல் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பட்டாசுக் கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் இரு பைக்குகளும் தீப்பற்றி எரிந்தன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (40). அப்பகுதியில் சொந்தமாக பட்டாசுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டாசுக் கடையின் பின்பகுதியில் சட்ட விரோதமாக செட் அமைத்து பட்டாசு தயாரித்தும், அதை பேக்கிங் செய்தும் வந்துள்ளனர். வழக்கம்போல் இன்றும் பட்டாசு கடையின் பின்பகுதியில் பட்டாசு தயாரித்துள்ளனர். அப்போது, மருந்து உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசுக் கடையிலிருந்த பட்டாசுகள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரமாக வெடித்துச் சிதறின. பட்டாசுக் கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் இரு பைக்குகளும் தீப்பற்றி எரிந்தன.

தகவறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால், தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததால் கடையின் அருகே சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பட்டாசுகள் வெடித்து முடித்த பின்னரே, தீயணைப்பு வீரர்களும், போலீஸாரும் மீட்புப் பணியைத் தொடங்கினர். அப்போது, பட்டாசு அங்கிருந்து தீயில் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில் அவர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பது தெரியவந்தது.

அதையடுத்து, அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories