ஆளுநர் உத்தரவும் திடீர் நிறுத்தி வைப்பும்!

governor ravi letters - 2026

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் கடிதம் அனுப்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து, கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி, மே 31ல், முதல்வருக்கு, ஆளுநர் ரவி கடிதம் எழுதினார். அதற்கு முதல்வர், ‘வழக்கு உள்ள காரணத்தினாலேயே, அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய அவசியமில்லை’ என பதில் கடிதம் அனுப்பினார்.

இதற்கிடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததால், அவரது இலாகாக்களை இரு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளித்து, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், துறை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஏற்க முடியாது’ என தெரிவித்தார்.

இதை கண்டு கொள்ளாமல், ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்’ என, முதல்வர் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து, நேற்று (ஜூன் 29) மாலை ஆளுநர் ரவி உத்தரவிட்டார். பின்னர் நள்ளிரவு அவரே அந்த உத்தரவை வாபஸ் பெற்றார்.

இது தொடர்பாக ஆளுநர், முதல்வர் ஸ்டாலினுக்கு அளித்த கடிதத்தில், ‘செந்தில்பாலாஜி விவகாரத்தில், அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்பது விவேகமானது என மத்திய உள்துறை அமைச்சர் எனக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இதன் அடிப்படையில் நான் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை நாடி உள்ளேன். இதனால், என்னிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரை, செந்தில்பாலாஜியின் நீக்கம் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது’ என விளக்கமளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், தமிழக அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், ‘செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்’ எனக் குறிப்பிட்டு ஆளுநர் ரவிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories