கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாத சர்வாதிகாரி அரசு: இந்து முன்னணி விமர்சனம்!

1743979 chess mk stalin - 2026

கனல் கண்ணன் மற்றும் S.J.சூர்யா மீது வழக்கு மற்றும் சமூக செயற்பாட்டாளர் உமா கார்கிக்கு விசாரணைக் காவல் என்று செயல்படும் திமுக., அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது இந்து முன்னணி. இது குறித்து இன்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இளம் பெண்களுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வந்த நிலையில், இந்து முன்னணி கலை இலக்கிய அணி மாநில தலைவரும் திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் அவர்கள் தான் திரைத் துறையை சேர்ந்தவர் என்பதால் சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்ட நடன வீடியோவை ரசனை எண்ணத்தோடு பகிர்ந்துள்ளார்.

இது எப்படி குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான விரோதமாகும். கனல் கண்ணன் அவர்கள் தானாக பாதிரியார் போன்று போலியாக நடிக்க வைத்து வீடியோ தயார் செய்யவில்லை. ஏற்கனவே சமூகவலைத் தளங்களில் வைரலான வீடியோவை தனது பக்கத்தில் பதிவிட்டமைக்காக வழக்கு போடுவதெல்லாம் கருத்துரிமையின் குரல்வளையை நசுக்குவதாகும்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வாயை திறந்தாலே கருத்துரிமை,சமூக நீதி, கருத்தை கருத்தால் எதிகொள்ள வேண்டும் என்று பக்கம் பக்கமாய் பேசுபவர்கள்.

ஆனால் இன்று இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக யாரேனும் கருத்து தெரிவித்தால் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் பொய் வழக்கு போடுவது, சிறையில் அடைப்பது என்று காவல்துறை மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில் திமுக மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் உமா கார்கி அவர்களை பெண் என்றும் பாராமல் சாதாரண வழக்கிற்கு கைது செய்தது மட்டுமில்லாமல் விசாரணை காவலில் எடுப்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.போலீஸ் கஸ்டடியில் எடுத்து பயமுறுத்த பார்க்கிறார்களா.?

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் காவல்துறையை வைத்து அடக்குமுறையில் ஈடுபடுவதா?அதேபோல் பாஜகவின் திரு.S.J.சூர்யா அவர்கள் சிதம்பரம் கோவில் குறித்து வெளியிட்ட பதிவிற்கும் வழக்கு

போடப்பட்டுள்ளது. தமிழக அரசு இதுபோன்ற அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடாமல் தமிழகத்தில் சாதிய மோதல், விலைவாசி

ஏற்றம்.திமுக உறுப்பினரின் கட்டப்பஞ்சாயத்து மற்றும் அடாவடி ஆகியவற்றை தடுத்திட காவல்துறையினரை கவனம் கொடுத்து செயல்பட அறிவுறுத்துமாறு இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. மேலும் கனல் கண்ணன் மற்றும் S.J சூர்யா அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கையும் திரும்பப் பெற வேண்டுமெனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories