அண்ணாமலை பாத யாத்திரை! திட்டமிடல் தடபுடல்!

bjp annamalai - 2026
#image_title

ரத யாத்திரையால் வளர்ந்த கட்சி என்று பாஜக.,வை சுட்டிக் காட்டுவார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி முதலிய தலைவர்கள் நிகழ்த்திய ரதயாத்திரைகளின் பலனாக இன்று அக்கட்சி மத்தியில் வலுவுடன் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. பல மாநிலங்களில் பாஜக., செல்வாக்குடன் திகழ்கிறது.

அதுபோல் தமிழகத்தில் ஒரு மக்கள் யாத்திரை நடத்தி, மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டும் என்பது பாஜக.,வின் நெடுங்கால எண்ணம். அதற்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் தற்போதைய தலைவர் கே.அண்ணாமலை. இதற்காக பாஜக.,வினர் பெரும் முயற்சி எடுத்து தயாராகி வருகின்றனர்.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஜூலை 28ல் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதைத் தொடங்கி வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வருகிறார் என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை தமிழக பாஜக.,வின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், திமுக., அரசு செய்யும் தவறுகளை கடுமையாக எதிர்கொண்டு சுட்டிக் காட்டுகிறார். திமுக., அமைச்சர்களின் ஊழல்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார். அண்ணாமலை வெளியிட்ட திமுக., ஃபைல்ஸ் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக., வினரின் சொத்துப் பட்டியல் இவ்வளவு பெரிதா என்று மக்கள் வாய் பிளந்தனர்.

இதை அடுத்து, திமுக., அரசின் ஊழல்களை வெளிப்படுத்தவும், மக்களின் ஆதரவைப் பெறவும், ஜூலை 28ல் ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகம் முழுதும் பாதயாத்திரை செல்லத் திட்டமிட்டுள்ளார் அண்ணாமலை. அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து, உற்சாகப் படுத்தி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதைத் தொடங்கி வைக்க ராமநாதபுரம் வருகிறாராம்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை, தி.நகரில் உள்ள பாஜக., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பாஜக., மாவட்டத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். முதல் கட்ட யாத்திரை, ராமநாதபுரத்தில் தொடங்கி, சிவகங்கை, துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் வழியாகச் செல்கிறது. தொடர்ந்து தமிழகம் முழுதும் பாத யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் அண்ணாமலை பேசியபோது, பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாத யாத்திரையில் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் 20,000 பேரை பங்கேற்க வைக்க வேண்டும். அதில் பொது மக்கள் 10,000 பேர் இருக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் தினமும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories