December 5, 2025, 9:36 PM
26.6 C
Chennai

ஆன்மிக வரலாறு திராவிட அரசியலால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது!

kadeswara subramaniam hindu munnani - 2025

ஆன்மிக வரலாறு திராவிட அரசியலால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

மதுரை என்றால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்பது உலக பிரசித்தி பெற்றது. அதிலும் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள். அதில் பெரும்பாலும் மதுரையை சுற்றி நடந்த நிகழ்வுகள். இறைவன் வந்து நடத்திய நிகழ்ச்சிகள் எத்துணை பெருமை வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வுகளை நினைவுபடுத்தி கொண்டாடும் வகையில் திருவிழாக்கள் காலம்காலமாக நடைபெற்றும் வருகிறது.

தை மாத தெப்பத்திருவிழா 8ஆம் நாளில் தெப்பக்குளத்தில் நடைபெறும் வலைவீசி திருவிழா. தற்போது அந்த குளத்தையும் அதன் அருகில் இருந்த காளக்கோவிலையும் ஆக்கிரமிக்கப்பட்டு காணவில்லை என மதுரை நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை இறைவன் திருவிளையாடல் புரிந்த புண்ணிய பூமி. ஆன்மிக வரலாற்று சுவடுகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் இந்து கோவில்களை இந்து ஆன்மிக விழாக்களை இன்றளவும் திமுக தலைவர்கள் இழிவுபடுத்தி பேசி வருவதை பார்க்கிறோம்.

ஆன்மிக விழா என கண்டு தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து மதுரைக்கு வருகிறார்கள்.இதன் மூலம் பல கோடி வருவாய் அரசுக்கு வருகிறது.

கோவில்களை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோவில் குளத்தை, கோவிலை கானோம் என்றால் இதற்கு யார் காரணம்? கோவிலை திருக்குளத்தை தனியார் ஆக்கிரமிக்க அரசு அதிகாரிகள் துணைபோகின்றனர்.

ஊழலும் முறைகேடும் செய்து கோவில்களை அழிக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் தமிழக அரசு செயல்படுத்துகிறது என்பது பக்தர்களின் குற்றச்சாட்டு.

எத்தகைய பாரம்பரியமிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடந்த இடத்தை பராமரிப்பு இல்லாமலும் ஆக்கிரமிக்கவும் இடம் தந்தது வெட்கக்கேடான செயல்.

இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக திருக்கோவிலின் ஆன்மிக வரலாற்று இடங்களை பாதுகாக்க, பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக 64 திருவிளையாடல்கள் நடைபெற்ற அனைத்து இடங்களும் இன்றும் உள்ளது. அவற்றைக் கண்டு மீட்பது அரனைளையத்துரையின் தலையாய கடமை என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories