நின்றிருந்த வேன் மீது மற்றொரு வேன் மோதல்; தென்காசியைச் சேர்ந்த இருவர் மதுரையில் உயிரிழப்பு!

crime scene - 2026

திருப்பரங்குன்றத்தில் நின்றிருந்த வேன் மீது மற்றொரு வேன் மோதி… பெண் உள்பட இருவர் உயிரிழப்பு!

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நின்ற வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தார்கள்.

தென்காசியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி ஜெயஸ்ரீ (50), சண்முகராஜா (40), கிருஷ்ணன் (38), வைரமுத்து (29), செந்தில் இசக்கி (28) ஆகியோர் கோயம்புத்தூருக்கு ஒரு வணிக அமைப்பின் கூட்டத்துக்காகச் செனறிருந்தனர். அங்கிருந்து கிளம்பி நள்ளிரவு சொந்த ஊருக்குத் திரும்பினர்.

அவர்கள் சென்ற வேன் திருப்பரங்குன்றம் மொட்டமலை பாரதி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது. இதில் படுகாயம் அடைந்து, வேனில் பயணம் செய்த ஜெயஸ்ரீயும் சண்முகராஜாவும் உயிரிழந்தார்கள். கிருஷ்ணன், வைரமுத்து, செந்தில் இசக்கி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஆஸ்டின்நட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஜெய்ஹிந்த்புரத்தில் முன்விரோதத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து: மூவர் கைது!

மதுரை , ஜெயந்த்புரத்தில் முன் விரோதத்தில் இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முதல் தெரு ராமமூர்த்தி முதல் தெருவை சேர்ந்தவர் சேட் மகன் பாதுஷா (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் சூர்யா (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சோலையழகுபுரம்பு திருப்பதி நகர் வழியாகச் சென்று கொண்டிருந்த பாதுஷாவை மூன்று பேர் வழிமறித்தனர். அவர்கள் அவரை ஆபாசமாக பேசி வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதுஷா ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சோலை அழகுபுரம் முதல் தெரு முத்துக்குமார் மகன் சூர்யா 21, துரைச்சாமி மகன் மதன் என்றமந்தாரு 20, லெனின் அழகர்சாமி மகன் கார்த்திக் என்ற மிச்சர் கார்த்தி22 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


செல்போனில் பேசி பெண்ணுக்கு டார்ச்சர்; தட்டிக்கேட்ட கணவன் மனைவி மீது தாக்குதல்! இருவர் கைது!

செல்போனில் பேசி இளம் பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்ததை தட்டிக் கேட்ட கணவன் மனைவியை தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

மதுரை, காமராஜபுரம் என்.ஈம்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் சங்கர் மகன் கணேஷ் 34. இவருடைய நண்பர் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி ஆபாசமாக பேசி டார்ச்சர் கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் அவருடைய கணவரிடம் தெரிவித்துள்ளார் .

இதைத் தொடர்ந்து, கணவன் மனைவி இருவரும் கணேஷை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் அவரது நண்பர் தெற்கு வாசல் ஆண்டவர் முதல் தெருவை சேர்ந்த அப்துல்லா 44 இருவரும் சேர்ந்து தெற்கு வாசல் ஜெயவிலாஸ் பாலம் அருகே சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணையும் அவர் கணவரையும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் கணவரும் கீரைத் துறை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தாக்கிய கணேஷ் 34 அவருடைய நண்பர் அமானுல்லா 44 ஆகிய இருவரையும் கைது செய்தனர் .


வியாபாரத்தில் நஷ்டம் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை!

மதுரை, பிபி குளம் வள்ளலார் தெரு காமராஜர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் 46. இவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார்.

இதனால் மது பழக்கத்திற்கும் அடிமையானார்.மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மணமடைந்த செந்தில்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இந்த சம்பவம் குறித்து மனைவி முத்துலதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அண்ணா நகரில் தனியாக நின்ற பெண்ணிடம் இரண்டரை பவுன் செயின் பறிப்பு: பைக் ஆசாமிகள் கைவரிசை!

மதுரை , அண்ணா நகரில் தனியாக நின்ற பெண்ணிடம் இரண்டரை பவுன் செயின் பறித்த பைக் ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.

அனுப்பானடி மகாத்மா காந்தி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ரம்யா31. இவர் அண்ணாநகரில் ஒரு தியேட்டர் முன்பாக உள்ள ஸ்கேன் சென்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அவர் தனியாக நிற்பதை கண்ட இரண்டு பைக் ஆசாமிகள் அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச்செயினை பறித்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ரம்யா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories