அரசுக் கூட்டத்தைப் புறக்கணித்து, கத்தோலிக்க சபைக் கூட்டத்தில் ஆஜர்: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை!

hindumunnani - 2026

பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு நடத்தும் முகாமை புறக்கணித்து கத்தோலிக்க சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்துமுன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் வெளியிட்ட அறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்காக தமிழக அரசால் அவ்வப்போது CRC கூட்டம் நடத்தப்படும். இதில் மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது, பள்ளிகளை எப்படி நிர்வகிப்பது என்பதுடன், பள்ளிக்கல்வித்துறை குறித்த முக்கியமான செயல்பாடுகளுக்கான பயிற்சி முறைகளும் இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக CRC கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில் சாதாரண விடுப்பு கூட ஆசிரியர்களுக்கு பொதுவாக அனுமதிக்கப் படுவதில்லை.

இன்று (ஜூலை 22) திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சிஆர்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரசு உதவி பெறும் கத்தோலிக்க சபை சார்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கான கத்தோலிக்க சபை கூட்டம் பாளையங்கோட்டை மாதா மஹாலில் இன்று காலை நடைபெறுகிறது. இதில் அனைத்து கத்தோலிக்க பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என கத்தோலிக்க சபை நிர்வாகம் சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ: இந்துக்களின் கடைசி நம்பிக்கையை சீர்குலைக்கும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்!

கத்தோலிக்க சபையின் இந்த உத்தரவுக்கு இணங்க, அரசு உதவி பெறும் கத்தோலிக்க சபை பள்ளிகளைச் சார்ந்த நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பள்ளி ஆசிரியர்கள் அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறும் சி ஆர் சி முகாமில் பங்கேற்காமல், கத்தோலிக்க சபைக் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இது அரசு உத்தரவை அவமதிக்கும் செயலாகும். மத ரீதியாக சி.ஆர்.சி கூட்டத்திற்கு விதிவிலக்கு வழங்குவது ஏற்புடையது அல்ல. வரும் காலங்களில் இதுபோல் அனைத்து ஆசிரியர்களும் அவரவர் வசதிக்கேற்ப சி ஆர் சி முகாமை புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். இதனால் அரசாங்கத்தின் செயல் திட்டம் பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடும்.

இந்து ஆசிரியர்களுக்கு சாதாரண விடுப்புகூட எடுக்க அனுமதிக்கப் படாத நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சிஆர்சி பயிற்சி முகாமில் கத்தோலிக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டது?

அரசு வழிகாட்டுதல் படி நடைபெறும் சிஆர்சி கூட்டத்தில் இன்று பங்கேற்காத கத்தோலிக்க சபை பள்ளி ஆசிரியர்கள் மீது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட கல்வி நிர்வாகம் துறை ரீதியாக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் இது குறித்து விசாரித்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories