சதுரகிரி மலையில் தொடரும் காட்டுத்தீபற்ற வைத்தவர் கைது..

IMG 20230729 WA0229 - 2026

சதுரகிரி மலையில் நேற்று முன் தினம் பற்றிய காட்டுத்தீ நேற்று இரண்டாம் நாளாக தொடர்ந்து எரிந்தது. அங்கு தீயை பற்ற வைத்த மலைவாழ் பழங்குடி இனத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சதுரகிரி மலையில் கடந்த ஜூலை 15-ம் தேதி காட்டுத்தீ பற்றியது. இதனால் அமாவாசை தரிசனத்திற்காக மலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அடிவாரம் வர முடியாமல் தவித்தனர். வனத்துறையினர் மூன்று நாட்களாக போராடி தீயை அணைத்தனர்.

இந்நிலையில் நேறறு முன் தினம் இரவு சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட 5 வது பீட் மறறும் ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோயில் வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக 6வது பீட்டிற்கும் பரவியது. வனச்சரகர்கள் செல்லமணி, பிரபாகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரு குழுக்களாக பிரிந்து இரண்டு நாட்களாக போராடி நேற்று இரவு தீயை அணைத்தனர்.

ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ந்து இரு தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்தது வனத்துறையினருக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் மலையடிவாரமான தாணிப்பாறை ராம் நகர் பழங்குடியின மக்கள் குடியிருப்பை சேர்ந்த யானை கருப்பன் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில்,

மலைவாழ் மக்கள் மலையில் உள்ள மூலிகை மற்றும் தேன், நெல்லி, சாம்பிராணி போன்ற மகசூல் தரும் பொருட்களை சேகரிப்பதற்கு வனத்துறை தடைவிதித்ததாலும், மலைப்பாதையில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய அனுமதி நாட்களில் தற்காலிக கடை வைக்க அனுமதி மறுத்ததாலும், ஆடு மாடுகள் மேய்ப்பதற்கு வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்ததாலும் ஆத்திரமடைந்து வனத்திற்கு தீ வைத்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories