‘என் மண் என் மக்கள்’ அண்ணாமலை பாத யாத்திரையின் 4ம் நாளில்!

annamalai yatra day 4 thiruvadanai - 2026

தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் நான்காம் நாளில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அவர் மக்களைச் சந்தித்துப் பேசினார்.

தனது திருவாடானை பகுதி அனுபவம் குறித்து அண்ணாமலை சமூகத் தளப் பதிவில குறிப்பிட்டிருப்பதாவது…

இன்றைய #EnMannEnMakkal பயணத்தில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியின் நலத்திட்டங்கள், நாடு முழுவதும் சென்றடைந்திருக்கின்றன என்பது, கூடியிருந்த மக்களின் அன்பில் வெளிப்படுகிறது.

தேச பாதுகாப்புக்காக பெருமளவில் ராணுவ வீரர்களை அனுப்பும் ஊர் திருவாடானை. எல்லையைப் பாதுகாக்க உயிரையே தியாகம் செய்த ஹவில்தார் பழனி அவர்களின் தியாகத்தை கௌரவிக்கும் விதமாக பிரதமர் மோடி அரசு உயரிய ராணுவ விருதான பரம்வீர் சக்ரா விருது அளித்தது

ராமநாதபுரம் மாவட்டத்தில், கிட்டத்தட்ட 25,000 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம், 50,000 பேருக்கு ஜல்ஜீவன் குடி நீர்த் திட்டம், 1,40,000 பேருக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள், 30,000 பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு, அரசு மருத்துவக் கல்லூரி என மாண்புமிகு பாரதப் பிரதமர் வழங்கிய நலத்திட்டங்கள் ஏராளம்.

காவிரி நீர் வரத்து குறைந்துள்ளதால் திருவாடானையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய ஊழல் திமுக அரசும் திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராமநாதபுரம் தொகுதியில் அரசு கல்லூரிகள் கொண்டு வருவோம், நான்கு வழிச் சாலைகள் அமைப்போம் என்றெல்லாம் போலி வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆர்.எஸ். மங்கலம் கண்மாயைப் போன்ற நீர்நிலைகளைச் சீரமைக்க மத்திய அரசு நிதி வழங்கியும், ஊழல் திமுக அரசு இன்னும் அதனைப் புனரமைக்காமல் இருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்க, தமிழகமும் பெரும்பங்கு வகிக்கும் என்பது உறுதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories