வீட்டிலே ஆடு; மதுரையில் ஜல்லிக்கட்டு மாடு! சீறிய காளையை பாசத்தால் கட்டுப்படுத்திய அண்ணாமலை!

annamalai bull - 2026

மதுரயில், கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளையைக் கண்டு, தெறித்து ஓடிய தொண்டர்களையும், காளையையும் பாசத்தால் கட்டுப்படுத்திய அண்ணாமலை குறித்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது..

மதுரை மாவட்டத்தில் பாதயாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் வரவேற்பிற்காக கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை ஒன்று, அண்ணாமலை வந்து வஸ்திரம் சாற்றி பொட்டு வைத்த போது, கூட்டத்தைக் கண்டு மிரண்டு, திடீரென துள்ளிக் குதித்தது. அதனால் உடன் இருந்த கூட்டத்தினர் சற்று பின்வாங்கிச் சென்றனர். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை உடனே அதன் அருகில் வந்து, முகத்தில் தடவிக் கொடுத்து, அதனை அமைதிப்படுத்தினார். அதன் பின் மாடு தலையாட்டியபடி அமைதியாக நின்றது. இந்தக் காட்சி சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

‘என் மண், என் மக்கள்’ என  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் தழுவிய அளவில் பாதயாத்திரை மேற்கொணடு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டத்தில் பாதையாத்திரை மேற்கொண்டார். இதில், மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகே பாதயாத்திரை தொடங்கியுயது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரை தொடங்கும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளைக் கட்டி வரவேற்பு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தான் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றது.

அண்ணாமலை ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் வீட்டிலே ஆடுகள் வளர்ப்பினைக் கொண்டவர் என்பதும் தெரிந்த விஷயம்தான். அங்கே ஆடுகளுடன் அன்பாகப் பழகியவர், இன்று சீறும் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையையும் அச்சமின்றி அருகே சென்று அன்பாகத் தடவிக் கொடுத்து அமைதிப் படுத்தியதைக் கண்ட கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரை சந்தைப்பேட்டை பெரிய கடை வீதி, நகைக்கடை பஜார், சிவன் கோவில், செக்கடி, அழகர் கோவில் ரோடு வழியாக மேலூர் பஸ் நிலையத்தை அடைந்தது.

வழிநெடுகிலும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக.,வினர் மட்டுமல்லாது, பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வத்துடன் மலர்களைத் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்று மகிழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories