spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்இந்திய இறையாண்மை, தேசியக் கொடி அவமதிப்புகளை அரசு கடுமையாகக் கையாள வேண்டும்!

இந்திய இறையாண்மை, தேசியக் கொடி அவமதிப்புகளை அரசு கடுமையாகக் கையாள வேண்டும்!

- Advertisement -

இந்திய இறையாண்மையை, தேசியக் கொடியை அவமதித்தவனை கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் தண்டிக்க வேண்டும் – வெளிநாட்டில் வசித்தால் கடவுச் சீட்டை ரத்து செய்து திரும்ப அழைத்து வரச் செய்து தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

சார்ஜாவில் வசிக்கும் கோவையை சேர்ந்தவனாகக் கருதப்படும்Mhm அப்துல்லா என்பவன் தனது முகநூல் பக்க ப்ரோபைல் படமாக தேசிய கொடியை தலைகீழாக வைத்து நடுவில் அசோக சக்கரத்திற்கு பதிலாக பிறையையும் நட்சத்திரத்தையும் சேர்த்து வடிவமைத்து உள்ளான். பாரதத்தை நேசிக்கும் யாரும் இது போன்ற இறையாண்மைக்கு எதிரான செயல்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது போன்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதை தாண்டி இவன் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குபதிவு செய்யவேண்டும்.

தேசியக்கொடி என்பது ஒவ்வொரு குடிமகனும் போற்றி வணங்கவேண்டிய ஒன்று.பல தியாகிகளும், தேசபக்தர்களும் தங்கள் உடல், பொருள் , ஆவியை வழங்கி பெற்றுத் தந்த சுதந்திரத்தின் அடையாளம். அத்தகைய மாண்பு பொருந்திய தேசியக் கொடியை மதவெறிக்கு பலியாக்கும் வண்ணம் மாற்றி முகநூலில் பதிவு செய்வது என்பது தேசவிரோதத்தின் உச்சம்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்ற செயல்களை வேடிக்கை பார்க்க முடியாது. தொடர்ந்து பல முஸ்லீம் அமைப்புகளின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நாட்டை 2047 க்குள் இஸ்லாமிய நாடாக்குவோம் என்ற கோசம் தடைசெய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா அமைப்பால் பரப்ப்பட்டது.இதன் பல கட்ட தலைவர்கள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவோம் எனப் பேசிய வீடியோக்கள் சமூக ஒற்றுமையை கேள்விக் குறியாக்கியுள்ளது.

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியாவின் கேரள மகளிரணி தலைவி ரபாயா ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஆர்.எஸ்.எஸ்.மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் கேரளாவை முஸ்லீம் நாடாக மாற்றியிருப்போம் என வெளிப்படையாக பேசினார். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் நடைபெற்ற ஊர்வலத்தில் முஸ்லீம்கள் சிலர் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்டனர். இது போன்ற செயல்கள் அவர்களின் மதவெறியை பச்சையாய் காட்டுகிறது.

முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளில் உள்ள நபர்கள் நமது தேசியக் கொடிக்கு பதிலாக முஸ்லீம் பிறைகொடியை தனது சமூக வலைத்தளங்களில் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுர மாவட்டம் தொண்டியில் ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் வார்த்தைகள் அச்சிடப்பட்ட பனியன்களை இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் அணிந்திருந்ததை யாரும் மறுக்க இயலாது. ஓராண்டுக்கு முன்னதாக பழநிக்கு அருகில் உள்ள ஆயக்குடியில் இருசக்கர வாகனத்தில் பாகிஸ்தான் கொடியோடு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோசமிட்டவாறே நூறுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வலம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியாக இங்கேயே வாழ்ந்து கொண்டு உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் விதமாக இவர்களது மதவெறி தேசிய கொடியை மாற்றும் அளவிற்கு மாறியுள்ளது.

போலி மதசார்பின்மை பேசும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம். சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக முஸ்லீம் ஆதரவு நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருவதால் தேசத்திற்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகி விட்டது.

ஏற்கனவே கேரளாவில் முஸ்லீம் மக்கள் தொகை பெருகிவிட்ட மாவட்டங்கள் பாகிஸ்தான் போல் காட்சியளிக்கிறது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் சில முஸ்லீம்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் தனிநாடு கோசம் வலுக்கிறது.இதையெல்லாம் மனதில் கொண்டு நடுநிலை பேசுபவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.இந்துத்துவத்தை எதிர்க்கிறோம் என்ற பேரில் இந்தியாவையே எதிர்க்கும் பலரை அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய நேரமிது.

தைரியமாக சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை மாற்றி வைக்கும் தேச துரோகிகளை இந்துமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய அரசும், தமிழக அரசும், காவல்துறையும் இவர்களை போன்றவர்களை கண்காணித்து கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe