தொடங்கியது – வடகிழக்கு பருவமழை!

rains weather rain women - 2026
#image_title

வடகிழக்கு பருவமழை தொடங்கியது !

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தமிழகம், புதுச்சேரி யூனிய்ன பகுதி, கேரளப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியிருப்பதால் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இருப்பினும், பொதுவாக வடகிழக்கு பருவமழையின் ஆரம்ப கட்டம் பலவீனமாகவே இருக்கும்.

அரபிக் கடலில் புயல்

தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 24 கிமீ மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, “தேஜ்” சூறாவளியாக வலுவடைந்து, அதே பகுதியில் அக்டோபர் 21ஆம் தேதி காலை 0530 மணிக்கு மையம் கொண்டிருந்தது. “தேஜ்” புயல் 9.9° வட அட்சரேகை மற்றும் 59.4° கிழக்கு தீர்க்கரேகை புள்ளியில், ஏமன் நாட்டில் உள்ள சோகோட்ரா என்ற இடத்தில் இருந்து சுமார் 670 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும் (Severe Cyclonic Storm) அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் (Very Severe Cyclonic Storm) வலுப்பெற வாய்ப்புள்ளது. இது 22ஆம் தேதி காலை வரை மேற்கு-வடமேற்கு நோக்கியும், அதன்பிறகு 24ஆம் தேதி காலை வரை வடமேற்கு நோக்கியும், பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கியும் நகர வாய்ப்புள்ளது. இது அக்டோபர் 25 ஆம் தேதி அதிகாலையில் அல் கைதா (ஏமன்) மற்றும் சலாலா (ஓமன்) இடையே ஏமன்-ஓமன் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இந்தப் புயலால் இந்தியப் பகுதிகளுக்கு பாதிப்பில்லை. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் புயல் பகுதியை தவிர்க்க வேண்டும்.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) 21 அக்டோபர் 2023 காலை 0530 மணிக்கு தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் நளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது அடுத்த 3 நாட்களில் வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இது புயலாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இன்று சில நாளிதழ்களில் குறிப்பிட்டுள்ளது போல புயல் உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளது.

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் இந்த மழை தொடர வாய்ப்பு குறைவாக உள்ளது.

குமரிக் கடல் பகுதி மற்றும் சுற்றுப்புறத்தின் கீழ் மற்றும் நடுத்தர மட்டத்தில் ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகம், கேரளப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories