WC 2023: பாகிஸ்தானை வென்ற ஆஸ்திரேலிய அணி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
16ஆம் நாள் – ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
பெங்களூரு – 20.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆஸ்திரேலிய அணி (367/9, வார்னர் 163, மிட்சல் மார்ஷ் 121, ஷாஹீன் ஷா அஃப்ரிடி 5/54, ஹாரிஸ் ராவுஃப் 3/83) பாகிஸ்தான் அணியை (45.3 ஓவரில் 305, இமாம் உல் ஹக் 70, ஷஃபிக் 64, ரிஸ்வான் 46, ஷகீல் 30, சாம்பா 4/53, ஸ்டொயினிஸ் 2/40, பேட் கம்மின்ஸ் 2/40) 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆனால் அந்த அணியின் அந்த முடிவு அந்த அணிக்குச் சாதகமாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களான பவர்ப்ளே ஓவர்களில் ஆஸ்திரேலிய தொடக்கவீரர்கள் வார்னர், மிட்சல் மார்ஷ் இருவரும் 82 ரன்கள் அடித்தனர். வார்னர் 10 ரன்னில் இருக்கும்போது ஒரு சுலமான கேட்சை பிடிக்க பாகிஸ்தான் அணி தவறியது.

33.5ஆவது ஓவரில் மார்ஷ் ஆட்டமிழக்கும்போது அவர் வார்னருடன் சேர்ந்து 259 ரன் சேர்த்திருந்தார். வார்னர் இதற்கு முன்னர், உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில், இதே போன்ற மூன்று பார்ட்னர்ஷிப் ரிகார்ட் வைத்திருக்கிறார் என்பது தனிக்கதை.

வார்னர் 44.2ஆவது ஓவரில் நாலாவது பேட்ஸ்மெனாக ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 325. அதன் பின்னர் அடுத்த ஐந்து ஓவர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அவர்கள் சரியாக ஆடியிருந்தால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 400ஐத் தாண்டியிருக்க வாய்ப்பிருந்தது.

பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் கடைசி ஐந்து ஓவர்களில் வீசிய துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 367 ரன் எடுத்தது.

பாகிஸ்தான் அணி தனது இன்னிங்க்ஸை ஆடத் தொடங்கியபோது அதன் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் ஷஃபீக் இருவரும் நன்றாக ஆடினர். ஆயினும் பவர்ப்ளே ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 59 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

பாகிஸ்தான் அணி பந்து வீசும்போது நாலு கேட்சுகளைத் தவற விட்டனர். ஆஸ்திரேலியா பந்து வீசும்போது அபோட் முதல் கேட்சைத் தவறவிட்டார். பின்னர் இமாம் உல் ஹக் 48 ரன்னில் இருக்கும்போது மார்ஷ் ஒரு கேட்ச் தவறவிட்டார். அச்சமயத்தில் ஸ்டொயினிஸ் இரண்டு தொடக்க வீரர்களின் விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.

அதன் பின்னர் பெரிய பார்ட்னர்ஷிப் எதுவும் பாகிஸ்தான் அணிக்கு ஏற்படவில்லை. எனவே 45.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளயும் இழந்து அந்த அணியால் 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சாம்பா தொடர்ந்து இரண்டாவது முறையாக நாலு விக்கட்டுகள் எடுத்தார்.

வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கவுள்ளன.

முதல் ஆட்டம் லக்னோவில் இலங்கை-நெதர்லாந்து அணிகளுக்கிடையே நடக்கிறது.

இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே மும்பையில் நடக்கவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories