December 5, 2025, 7:10 PM
26.7 C
Chennai

ஆர்.எஸ்.எஸ்., ஊர்வல அனுமதி மறுப்பு; நீதிமன்ற அவமதிப்பு!

kadeswara subramaniam hindu munnani - 2025

RSS அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தமிழகத்தில் அனுமதி மறுப்பு- நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்-கடும் கண்டனத்திற்கு உரியது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

1925ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவக்கப்பட்டது. அதன் நிறுவன நாளும் இந்நாட்டின் வெற்றி திருநாளுமாக கொண்டாடப்படும் விஜயதசமி நாளில் RSS அணிவகுப்பு ஊர்வலம் கடந்த 98ஆண்டுகளாக நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சி ஊர்வலம் அல்ல அது. கட்டுப்பாடுள்ள அணிவகுப்பாக அந்த ஊர்வலம் நடைபெறும். தனிநபரை குறிப்பிட்ட வாழ்க, ஒழிக கோஷங்கள் எதுவும் எழுப்பப்படாது. சீருடை அணிந்த தன்னார்வலர்களால் மக்களிடையே கட்டுப்பாடு,தேசபக்தி, ஒற்றுமை, ஒழுங்கு போன்ற நற்சிந்தனையை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெறும்.

கேரளா, புதுச்சேரி உட்பட எல்லா மாநிலங்களிலும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியும் அமைதியாக உற்சாகமாக நடைபெற்றது. அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

எந்த மாநிலத்திலும் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை தமிழகத்தில் இருக்கிறது என தமிழக அரசு கருதுவது திமுக அரசின் ஆளுமை தன்மையில் உள்ள குறைபாடாகத்தான் தெரிகிறது. அதே சமயம் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது.

இது ஜனநாயக விரோதமானது. அனுமதி அளிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்பதை காட்டிலும் நீதிமன்றத்தின் கருத்தினை அலட்சியம் செய்யும் நடத்தையாகும். இது ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரான சர்வாதிகாரம்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை தடை செய்ய எந்த காரணமும் இருக்க முடியாது. தமிழகத்தில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மாநாடு என அனைத்து அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் தேச ஒருமைப்பாட்டிற்கு தேசியத்திற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு காவல்துறை அனுமதி அளித்து வேடிக்கை பார்க்கிறது.

தேசபக்தியை கட்டுப்பாட்டை நேர்த்தியாக நடத்தி காட்டும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தாக்கம் திராவிட அரசியல்வாதிகளுக்கு கசக்கத்தான் செய்யும்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னை ரஷ்யாவின் சர்வாதிகாரியாக நினைத்து கொண்டு செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவரே தான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என அடிக்கடி கூறியும் வருகிறார். ஆனால் இந்த உலகில் சர்வாதிகாரியாக ஜனநாயகத்தை மதிக்காதவர்கள் கதி என்வனாது என்பதை சரித்திரத்தை பார்த்து அவர் தெளிவுபெறட்டும்.

நீதிமன்றம் உத்தரவுகளை மதித்து ஜனநாயக வழியில் தமிழக அரசு நடக்க வேண்டும் என்று இந்து முன்னனி கேட்டுக் கொள்கிறது.

எனவே தமிழக அரசு உடனடியாக ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதியை காலதாமதமின்றி வழங்கிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories