செங்கோட்டையில் அமைதியாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., பேரணி, பொதுக்கூட்டம்!

sengottai rss rout march - 2026
#image_title

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பேரணி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழ பஜார் பகுதியில் நவ.19 மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.

செங்கோட்டை வடக்குரதவீதி அப்பாமாடசாமி கோவில் முன்பு வீர வாஞ்சி திடலில் வைத்து தென்காசி மாவட்ட ராஷ்ட்டிரீய ஸ்யம் சேவக சங்கம் சார்பில் 98 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்தப் பேரணியில் முழு சீருடையுடன் 230 தொண்டர்கள் பங்கேற்றார்கள். பேரணியானது வடக்குரதவீதி, கீழ ரதவீதி, கேசி ரோடு, வண்டிமலச்சியம்மன் கோவில், சேர்வைகாரன் புதுத்தெரு, ஜவஹர்லால் ரோடு வழியாக வந்து அப்பாமாடசாமி கோவில் அருகில் நிறைவடைந்தது. இந்தப் பேரணி அமைதியாக நடைபெற்றது. பொது நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமாகக் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருமூர்த்தி தலைமை வகித்தார். ஐந்தருவி விவேகானந்தா ஆசிரமத்தின் ஸ்வாமி அகிலானந்தா ஆசியுரை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கன்யாகுமரி பகுதி செயலர் ஜோதீந்திரன்  உரை நிகழ்த்தினார்.

அவரது உரையில், “நம் நாட்டின் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கல்வி, செல்வ வளம் இருந்தது. அதை வெளிநாட்டினர் வந்து கொள்ளை அடித்தார்கள். இது சுதந்திரமடைந்த பின்னும் தொடர்ந்தது. ஆனால், கடந்த பத்து வருடத்தில் ஒரு ஸ்வயம்சேவகர் பொறுப்பில் அமர்ந்த பின், எத்தகைய மாற்றங்களை நாம் காண்கிறோம். காரணம், ஆள்பவர்களின் அர்ப்பணிப்பு. வேலையில் உறுதி. அதிகாரத்தின் மூலம்,  உலகின் குருவாய் பாரதம் மாறுவதை நாம் கண் முன்னே பார்க்கிறோம்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்காவையும் இணைத்து, எளியோரையும் அரவணைத்தோம். அதுதான் நம் சனாதன தர்மம் கற்றுக் கொடுத்தது. சனாதனம் என்றால் என்ன? அனைவருக்குமான வாழ்க்கை வழிகாட்டிதான் சனாதன தர்மம். வசுதைவ குடும்பகம் என்பதை நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். சதுர் வர்ணம் என்று சொல்லி வைத்தார்கள் என்றால், அது தொழிலின் அடிப்படையில்.

நம் நாட்டில் செல்வ வளம் இருந்ததால் தான் கஜினி முகமது படையெடுத்து ஒவ்வொரு முறையும் கொள்ளை அடித்துக் கொண்டு போனான். கல்விச் செல்வம் தழைத்தோங்கி இருந்ததால் தான், இந்த நாட்டின் கல்வி முறையை ஆங்கிலேயன் வந்து அவனுக்கு ஏற்றார்ப் போல் மாற்றினான்.

இப்போது சிலர் சொல்வது போல் ஆங்கிலேயர் வந்துதான் கல்வி கொடுத்தான் என்பது எவ்வளவு கொடுமை. நாம் நம்மை உணர வேண்டும். நம் நாட்டின் பாரம்பரியத்தை உணர வேண்டும். பாரதம் உலகின் குருவாய் ஆகும்!” என்று பேசினார்.

மாவட்ட பொறுப்பாளர் இரா.முருகேசன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தொண்டா்கள், இந்து முன்னனி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனா்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories