‘சங்கர நேத்ராலயா’ டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவு!

sankara nethralaya badrinath - 2026
#image_title

லட்சக் கணக்கானோருக்கு கண் பார்வை கிடைக்க அரும்பாடுபட்ட ‘சங்கர நேத்ராலயா’ அமைப்பின் நிறுவனர் டாக்டர். எஸ்.எஸ். பத்ரிநாத் தமது 83வது வயதில் செவ்வாய்க்கிழமை இன்று காலமானார்.

45 வருடங்கள் முன்பு சங்கர நேத்ராலயாவைத் தொடங்கியதன் மூலம், லட்சக்கணக்கான மக்கள் பார்வை மீளப் பெற்று, பயனடைந்து வருகின்றனர். மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநில மக்கள் சங்கர நேத்ராலயாவினால் அதிகம் பயனடைந்துள்ளனர்.

தனது திறமைகள் அனைத்தையும் சமுதாய நலனுக்காகவே அர்ப்பணம் செய்தவர் டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத். பெரும் தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையை முதலில் சென்னையில் நிறுவியவர் டாக்டர் பத்ரிநாத். இவர் வெளிநாடுகளில் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை முடித்த பிறகு, 1978ல் இந்த அமைப்பை நிறுவினார். ஏழை மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் போது, ​​கண் மருத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டு, அந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். அவர் 1962ல் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது இன்டர்ன்ஷிப் செய்தார். பின்னர், அவர் கண் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1978ம் ஆண்டில், காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடனும் வழிகாட்டலிலும், டாக்டர் பத்ரிநாத் மற்றும் சமூக சேவகர்கள் குழுவினர் சென்னையில் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். காஞ்சி சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் வடகிழக்கு மாநிலங்களிலும் சங்கர நேத்ராலயாவின் சேவை நீண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories