10 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 40 செமீ., மழை! மீட்புப் பணிக்கு அதிகாரிகள் நியமிப்பு!

Published:

tn secretariat - 2026
#image_title

தூத்துக்குடி மாவட்டத்தில், 10 மணிநேரத்தில் 39.4 செ.மீ. மழை பதிவானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவரும் நிலையில், அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 39.4 செ.மீ மழையும் சாத்தான்குளத்தில் 30.6 செ.மீ மழையும் பதிவு. காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலான மழைப்பொழிவின் அளவை வெளியிட்டுள்ளது வானிலை மையம்.

அரையாண்டுத் தேர்வு – 4 மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு-அண்ணா பல்கலைக்கழகம். தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைப்பு.

ஏற்கெனவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (டிச.18) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

விருதுநகர், ராமநாதபுரத்திலும் நாளை பள்ளி விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நாளை (டிச.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கனமழைக்கான முன்னெச்சரிக்கை இருப்பதாலும் அனைத்து வகை பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் திங்கட்கிழமை (18.12.2023) விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது.

முன்னதாக, கன மழை காரணமாக தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் நியமிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  1. கன்னியாகுமரி – சு. நாகராஜன், நில நிர்வாக ஆணையர்.
  2. திருநெல்வேலி – இரா. செல்வராஜ், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
  3. தூத்துக்குடி – பா.ஜோதி நிர்மலா, அரசு செயலாளர், வணிகவரித் துறை
  4. தென்காசி – சுன்சோங்கம் ஜதக் சிரு, அரசு செயலாளர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை
ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அவசரகால உதவி எண்கள்

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070
வாட்ஸ் அப் எண். – 94458 69848
மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் 1077

Related articles

Recent articles

spot_img