கடும் சேதமடைந்த திருச்செந்தூர் ரயில் வழித்தடம்!

nellai thiruchendur rail track - 2026
#image_title

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பு உள்ளான நிலையில், திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் வழித்தடம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் – செய்துங்கநல்லூர் இடையே தண்டவாளத்தில் அடிப்பகுதி முழுவதும் நீரில் அடிச்சென்று விட்டது. இந்த வழித்தடத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார ரயில்வழித்தடம் பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளது.

மின் எலக்ட்ரிக் போல் வயர்கள் பல இடங்களில் அறுந்து விழுந்து உள்ளது. இதனால் திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுபோல் திருநெல்வேலி – தென்காசி – செங்கோட்டை ரயில் வழித்தடத்திலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி நகரில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் தண்டவாளங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பழைய பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பிற்பகுதியில் உள்ள பிரதான ஸ்வீட் ஸ்டால் ஹோட்டல்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

பஸ் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழை தற்போது வரை இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகள் வயதானவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவி வருவதால் சுகாதாரத்துறை முடுக்கி விடப் பட்டுள்ளது.

இந்த நிலையில் ஞாயிறு நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அந்தியோதயா ரயில் திருச்சியிலும், மும்பை நாகர்கோவில் ரயில் திண்டுக்கல்லிலும், தாம்பரம் நாகர்கோவில் ரயில் கொடை ரோட்டிலும், பெங்களூர் நாகர்கோவில் மதுரையிலும், அனந்தபுரி ரயில் விருதுநகரிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியிலும் நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது‌.

18-12-2023 இன்று காலை 20683 தாம்பரம் செங்கோட்டை ரயில் விருதுநகரில் இருந்து ரயில் மாற்று பாதையில் சிவகாசி – ராஜபாளையம் – சங்கரன்கோவில் – தென்காசி வழியாக இயக்கப்பட்டது.

திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிக அளவில் மழை பெய்தாலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் ஓர் ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் அதாவது நேற்று மட்டும் 96 செ.மீ பெய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories