சேத்தூர் அருகே சாலை துண்டிப்பு; சபரிமலை பயணிகள் கவனத்துக்கு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – செங்கோட்டை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சேத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெயத பலத்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை மற்றும் குளங்களில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் அதிகரித்து சாலையில் செல்வதால், வாகனங்கள் சாலையைக் கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மழை ஓயும் வரை ராஜபாளையம் – சேத்தூர் வழி சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் செங்கோட்டை கொல்லம் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் இந்த வழியைத் தவிர்ப்பது நல்லது.

ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மதுரையில் இருந்து வரும் வழியில் ராஜபாளையம் – சங்கரன்கோவில் வழியாக செல்லலாம். தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் புளியங்குடி – சங்கரன்கோவில் வழியாக ராஜபாளையம், மதுரை செல்லலாம்.

இதுபோல் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி வழியாக சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் சாலையில் வாகனங்கள் செல்ல முடியுமா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, குமுளி கம்பம் வண்டிப்பெரியார் வழியாக சபரிமலைக்குச் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் இன்றும் தென்காசி – நெல்லை – குமரி – தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மீண்டும் 24 மணி நேரத்திற்கு சிகப்பு வண்ண எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்து உள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories