January 25, 2025, 3:53 PM
29 C
Chennai

இராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக ரூ.1.17 கோடி மோசடி: 5 பேர் கைது


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் விதிமுறைகளை மீறி உயர் அதிகாரியின் அனுமதியின்றி விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக ஒரு கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்தை மோசடி செய்த 5 பேரை பொருளதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் உட்பட 2பேரிடம் விசாரிக்கின்றனர். தலைமறைவாகியுள்ள ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்ட ஆவின் துணைப்பதிவாளர் நவராஜ். இவரது தலைமையில் பால் கூட்டுறவு சங்கங்களில் கணக்கு தணிக்கை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கணக்கை தணிக்கை செய்த போது, அதில் 2020-21ம் நிதியாண்டில் கூட்டுறவு சங்க பணம் ரூ.1 கோடிக்கு மேல் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சங்க பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் சங்க முன்னாள் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் 8 பேர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் நடைபெற்ற விசாரணையில், இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 2020-21ம் நிதியாண்டில் கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி விழிப்புணர்வு விளம்பரம் செய்தல், இதர செலவு வகை கணக்குகள் அடிப்படையில் உயரதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமலேய கூட்டுறவு சங்க நிதி ரூ.1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கையாடல் நடைபெற்றது உறுதியானதாம்.

ALSO READ:  மதமாற்ற பாதிரி மீது புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்!

இதில் கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர்களான இராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த முருகேசன் (63), பராசக்தி நகரை சேர்ந்த ராஜலிங்கம் (47), தளவாய்புரத்தை சேர்ந்த பொறுப்பு தலைவர் தங்க மாரியப்பன் (53), இராஜபாளையம் ஆனையூர் தெருவை சேர்ந்த கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம் (61), சம்மந்தபுரத்தை சேர்ந்த காளிராஜ் (56) ஆகிய 5 பேரை பொருளதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ், மேற்பார்வையாளர் ஜெயவீரன் ஆகியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத் வருகின்றனர். இதில், வனராஜ் அ.தி.மு.க.,வில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாகியுள்ள சிவா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவ பரிசோனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.